எந்திரன் ஹிட் பற்றி NDTV ஸ்பெஷல் ரிப்போர்ட்..(video)

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

எந்திரன் மெகா ஹிட்… முதல் அறிக்கை!

இந்திய திரையுலகம் இதுவரை காணாத வெற்றியை எந்திரன் பெற்றுள்ளது. துபாயில் இன்று காலை வெளியான எந்திரன் முதல் காட்சி (7.30 மணிக்கு) மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் “ரஜினி ரோபோ கெட்டப்பில் அசத்தியுள்ளார், இனி இந்தியாவில் எந்திரன் படம் போல் வருமா என்பது சந்தேகம்தான்” என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

“சூப்பர் ஸ்டார் ரஜினியை இதற்கு முன் இப்படியொரு பிரமாத கெட்டப்பில் பார்த்ததில்லை… எக்ஸலெண்ட் நடிப்பு, பிரமாதமான ஸ்டன்ட், ஐஸ் அழகு சொக்க வைக்கிறது. இயல்பான காமெடி, மிரள வைக்கும் இரண்டாம் பாகம்… குடும்பத்தோடு பார்க்க மிகச் சிறந்த பொழுதுபோக்குப் படம்”… இதுதான் எந்திரன் படம் குறித்து வந்திருக்கும் FIR. (முதல் தகவல் அறிக்கை).

துபாயில் இன்று காலை முதல் காட்சி 7.30 மணிக்கு திரையிடப்பட்டது. இந்தக் காட்சிக்காக ஒரு மணிநேரம் முன்பாகவே காத்திருந்தனர் ரசிகர்கள். அவர்களில் துபாயில் மார்க்கெட்டிங் அதிகாரியாகப் பணியாற்றும் வருணும் ஒருவர். படம் பார்த்ததையும், முடிந்தபிறகு ரசிகர்கள் மனநிலையையும் அவர் நம்மிடம் தொலைபேசி மூலம் கூறினார்.

அவர் கூறியதாவது :

“சான்ஸே இல்ல சார். படம்னா இதான். இதுக்கு மேல ஒரு ஹைடெக் கமர்ஷியல் படத்தை இனி இந்தியாவில் யாராலும் தர முடியுமா தெரியவில்லை. ரஜினி – ஷங்கர் காம்பினேஷன் அட்டகாசம். இரண்டே முக்கால் மணி நேரப் படம். எப்போது இடைவேளை வந்தது என்றே தெரியவில்லை. அதன் பிறகு, ஒன்றரை மணி நேரப் படம் போன வேகம் பிரமிக்க வைக்கிறது.

எந்திரனில் கிராபிக்ஸ் காட்சி எது என்று கண்டுபிடித்தால் ஒரு கோடி பரிசு என்று போட்டியே வைக்கலாம். அந்த அளவு மிரட்டல், அசத்தல். ஸ்டான்வின்ஸ்டன் ஸ்டுடியோ மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் செய்த ஹாலிவுட் நிறுவனத்தினர் கலக்கி இருக்கிறார்கள். எந்த ஆங்கிலப் படத்தின் பாதிப்பும் இல்லை. ஒரிஜினல் இந்திய ஆங்கிலப் படம் என்றுதான் இதனை நான் வர்ணிப்பேன்.

ரஜினியின் நடிப்புக்கு இந்த முறை தேசிய விருது நிச்சயம். ரோபோவாக கலக்கி இருக்கிறார். இந்த மனிதரை இதற்கு முன் யாருமே இத்தனை அற்புதமாகக் காட்டியதில்லை. ரஜினி – ஐஸ்வர்யா ஜோடி பிரமாதம். பல காட்சிகளில் பஞ்ச் டயலாக் இல்லாத, இயல்பான ரஜினியைப் பார்க்க முடிகிறது. இயக்குநர் ஷங்கருக்கு நன்றிகள். இந்தப் படம் சர்வதேச அளவில் விருதுகள் குவிக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை.

குடும்பத்துடன் அச்சமின்றிப் பார்க்கலாம் என உத்தரவாதமே தரலாம். படம் அத்தனை டீஸன்டாக உள்ளது. படத்தின் பாடல்களுக்காகவே தனியாக இன்னொரு முறை பார்க்க வேண்டும். குறிப்பாக கிளிமாஞ்சாரோ கலக்கல்…என்றார் அவர்.

அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் இன்றே எந்திரன் சிறப்புக் காட்சிகள் நடக்கின்றன. அந்த திரையரங்குகள் இப்போதே திருவிழாக் கோலம் பூண்டுள்ளதாக ரசிகர்கள் தொலைபேசி மூலம் தெரிவித்தனர். முதல் நாள் முதல் காட்சிக்கு பல நாடுகளில் ஒரு டிக்கெட் ரூ.3500 வரை விலை போயுள்ளது. அப்படியும் டிக்கெட் கிடைக்கவில்லை என்ற மனக்குறைதான் பலருக்கு.

நார்வேயில் டிக்கெட்டுகள் முழுக்க விற்றுத் தீர்ந்துள்ளன. மீண்டும் டிக்கெட் கேட்பவர்களைத் தவிர்க்க செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக விநியோகஸ்தர் தெரிவித்தார். ஸ்வீடனில் இந்தப் படம் நான்கு நாட்களுக்கு திரையிடப்படுகிறது. இந்த நாட்டில் இதுவே பெரும் சாதனையாம். இந்த நான்கு நாள் காட்சிகளுக்கான டிக்கெட்டுக்கும் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதாம்.

சிங்கப்பூரில் 11 திரையரங்கில் எந்திரன் ரிலீஸாகிறது. முதல் காட்சி இரவு 8 மணிக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக இப்போதிலிருந்தே தவம் கிடக்கிறார்களாம் ரசிகர்கள்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

எந்திரனை வெளிநாடுகளில் ஓடவைக்க போலிக்கண்ணீர் விட்ட ரஜனி!

Photobucket“சென்னை கம்பன் விழாவில், ஈழத் தமிழர் நிலை பற்றிய பேச்சை கேட்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கண்கலங்கினார்”.என்ற செய்தியை நேற்று ஊடகங்களில் அனைவரும் பார்த்திருப்பீர்கள்,பட்டிமன்றத்தில் இலங்கையைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவர் பேசிய பேச்சை கேட்டு சிறிது நேரம் மேடையைப் பார்த்துக் கொண்டிருந்தவர் பின்னர் கண்களைத் துடைத்துக் கொண்டாராம்.இது எவ்வளவு பெரிய கண்துடைப்பு வேலை என்று சிறுபிள்ளை கூட அறியும்.இவருக்கு கண்ணீர் வரவைக்கும் அளவுக்கு அந்த பேச்சில் பெரிதாக ஒன்றும் இருக்கவில்லை.அப்படி இருக்க எப்படி இவருக்கு மட்டும் அழுகை வந்தது!

*என்ன ரஜனிக்கு அன்று தான் ஈழம் என்றால் என்ன என்று தெர்யுமா?

*ரஜனி ஈழப்பிரச்சனை பற்றி இது வரை ஒரு வரி கூட அறிந்திருக்கவில்லையா?

*இல்லை ரஜனி தொலைக்காட்சி,இணையம்,வானொலி,பத்திரிகை என்று எந்த ஊடகமும் பார்க்காத மனிதர்களுடன் கருத்துக்களை கூட பரிமாரிக்கொளாத ஒருவரா?

*இறுதியாக கொடூர போர் முடிந்து  ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்ட இந்த நிலையில் தான் ரஜனிக்கு கண்ணீர் வருகிறதா?ஏன் இவ்வளவு நாளும் அவரது ரோபோவுடன் சேர்ந்து வேறு கிரகத்திற்கு போயிருந்தாரா?

அவரது எந்திரனை மொத்த உலகமும் எதிர்பார்க்கிறது ஈழதமிழர்களும் தான் இந்த வேலையில் வெளிநாட்டில் இருக்கும் புலம்பெயர் தமிழர்களிடம் படத்தை பார்க்க செய்ய இப்படி ஒரு நாடகம் ஆடி இருக்கிறார்.இவரது வயதுக்கும் அனுபவத்துக்கும் இருந்த மரியாதையை கூட தானாக குறைத்துக்கொண்டுள்ளார்.அதைவேறு இந்த தமிழ்நாட்டு ஊதுகுழல் பத்திரிகைகள் ஓவர் பில்டப்புடன் பிரசுரிக்கிறார்கள்.ஈழத்தமிழர்கள் அரசியல்வாதிகள்,நடிகர்கள்,கட்சிகளின் பின்னால் பல்லக்கு தூக்கும் கேனை தமிழர்களல்ல என்பதை ரஜனி தெரிந்துகொள்ளவேண்டும்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , , , . Leave a Comment »

அசத்தலான “எந்திரன்” உயர்தர படங்கள்

Photobucket
PhotobucketPhotobucket” alt=”" />
Photobucket” alt=”" />
Photobucket” alt=”" />
Photobucket” alt=”" />
Photobucket” alt=”" />
Photobucket” alt=”" />
Photobucket” alt=”" />
Photobucket” alt=”" />
Photobucket

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . 5 மறுமொழிகள் »
Follow

Get every new post delivered to your Inbox.

Join 92 other followers