விஜயும் சில முட்டாள்களும்..Anything for vijay..ஒரு அலசல்..

Anything for Vijay

கடந்த சில நாட்களாக SS Music தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம் தொடர்ச்சியாக வந்ததை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். விஜயை சந்திக்க இவர் என்ன செய்யப்போகிறார் என்ற வாசகத்துடன் ஒரு டப்பா விஷம், ஒரு ஹீட்டர் மற்றும் தலையை மழிக்க ஒரு கத்தி ஆகியவை காட்டப்பட்டன. அப்போதே இது ஏதோ ஏடாகூடமான நிகழ்ச்சி என்பது புரிந்தது.  சந்தேகமில்லை இதைவிட மட்டமான ஒரு நிகழ்ச்சி இதுவரை வந்திருக்க முடியாது.

அந்த நிகழ்ச்சியில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரண்டு போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இருவரும் ஒவ்வொரு செயலாக செய்கிறார்கள் (மன்னிக்கவும் இதை திறமை என சொல்வதற்கில்லை). அது குறித்து நடுவராக இருக்கும் அந்த டிவி பெண் தொகுப்பாளர் கருத்து தெரிவிக்கிறார். மற்றொரு நடுவர் முகத்தை மலச்சிக்கல் வந்த மாதிரி வைத்துக்கொண்டு கருத்து இல்லை என்று சொல்கிறார். கடைசியாக முடிவு அறிவிக்க வேண்டிய நேரத்தில் அவரது கருத்து கேட்கப்பட, அவர் போட்டியாளர்களை நோக்கி கேள்விகளை எழுப்புகிறார். அந்த கேள்விகள் யாவும் அவரை சிறைவைக்கும் அளவுக்கு அநாகரீகமானவை, மன்னிக்க இயலாதவை மற்றும் மனிதத்தன்மையற்றவை.

வா போ என்கிற ஏகவசனங்கள், வெளியே போ எனும் அதட்டல்கள் (கெட் அவுட் என இருமுறை கத்துகிறார்), நீ போட்டிக்கு தகுதியில்லாதவன் எனும் நேரடி அவமானங்கள் என அவரது ஒவ்வொரு வாக்கியமும் மனித உரிமை மீறலாகவே இருந்தது. இவை முன்பே திட்டமிடப்பட்டவை என்பதில் சந்தேகமில்லை. ஒரு நிறுவனத்தில் அதன் ஊழியருக்கு இதில் எதையாவது ஒன்றை செய்தாலும் அது குற்றம். அந்த குற்றங்கள் எதுவும் நடப்பதில்லை என நாம் சொல்லவில்லை. ஆனால் அப்படியொரு செய்கை நடைபெற்றதாக செய்தி வந்தாலே அந்த நிறுவனம் அதை நாங்கள் செய்யவில்லை என மறுக்கும். ஆனால் இங்கு இப்படியான ஒரு குற்றச்செயலை பட்டவர்த்தனமாக அதுவும் நாளுக்கு நூறு விளம்பரம் போட்டு ஒளிபரப்புகிறார்களே என்பதுதான் நம் பொறுமையை சோதிப்பதாக இருக்கிறது.

இதற்குப் பிறகு ஒரு போட்டி இருந்தது. அந்த கான்ஸ்டிபேஷன் நடுவர் இருவரையும் தகுதியவற்றவர்கள் என சொல்லி இறுதிவாய்ப்பாக ஒரு ஒரு போட்டிவைக்கிறார் (இதுவரையான போட்டிகளில் நீங்கள் ஜெயிக்கவில்லை, உங்களுக்கு எதிராக போட்டியிட்டவர்கள் தோற்றுவிட்டார்கள் என அதற்கு ஒரு விளக்கம் வேறு). விஜயை சந்திக்க மூன்று வாய்ப்புக்கள் தரப்படுகிறது. ஒன்று- விஷமருந்துவது, இரண்டு- ஹீட்டரில் கைவைப்பது(அது இயங்கும்போது) , மூன்று- தலையை மழித்துக்கொள்வது. இதில் ஏதேனுமொன்றை செய்தால் நீங்கள் அவரை சந்திக்கலாம் என்றால் எதை செய்வீர்கள் என கேட்கிறார்கள். அப்பெண் விஷமருந்துவேன் என்கிறார், அந்த இளைஞன் தலையை மொட்டை அடித்துக்கொள்வேன் என்கிறார்.

நீங்கள் இதை பார்த்திருந்தால் அப்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது என சொல்லுங்கள்.. பார்க்கவில்லை எனில் இதைப் படிக்கையில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என சொல்லுங்கள். மொட்டை அடிக்க கத்தியை தலையில் வைத்தபிறகு நடுவர்கள் ஞானோபதேசம் செய்கிறார்கள், “இதை நீங்கள் விரும்பும் விஜய் விரும்புவாரா?”. பிறகு மற்றொரு நடுவர் சொல்கிறார் “உங்களது இண்டலிஜென்சை சோதிக்கவே இந்த சுற்று வைக்கப்பட்டது”.  சோனியா அகிம்சையைப் பற்றி பேசியதை கேட்ட செவிகள் மன்மோகன் ஊழல் ஒழிப்பை பற்றி பேசியதை பார்த்த கண்கள் நம்முடையது, ஆகவே இந்த காட்சி ஒன்றும் நம்மை திகைக்க வைக்காது. ஆனால் இவர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள்.

விஜயை பார்க்கவேண்டும் என்பதற்காக ஒரு போட்டியில் கலந்துகொள்பவன் ஒரு முழுக்கேனையனாகத்தான் இருப்பான். ஒரு நடிகனைக் காண டான்ஸ் ஆடி ஜெயிப்பதே கேவலம், அதையே செய்தவன் மயிரை சிரைக்க மாட்டானா?  அட மூதேவிகளே இண்டலிஜென்சை சோதிக்க இதுவா வழி? எனக்குகூட விஜய் முகத்தில் காறித்துப்பி அவரது இண்டலிஜென்சை சோதிக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனாலும் நாம் மனிதர்கள் என்பது நினைவுக்கு வந்து அமைதிகொள்கிறோமா இல்லையா.. டிஆர்பிக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாமா ?

விஜய்க்காக எதையும் செய்யத்துணிபவன் நிச்சயம் ஒரு மனநோயாளியாகவே இருப்பான். ஆனாலும் ஒரு மனநோயாளியின் மான அவமானங்களைப்பற்றியும் மனித உரிமையப்பற்றியும் கவலைப்படுவது நம் கடமை.

இது தொலைக்காட்சிகளில் மட்டுமில்லை பதிவுலகத்தில் கூட வினு போன்ற கோமாளிகள் விஜய் தான் உலகம் போன்றும் அவனது ஒரு சுமாரான படமான காவலன் வென்றால் அது உலக சாதனை என்றும் நினைத்துக்கொண்டு கனிமொழி படத்தில் வருவது போல கற்பனையில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்…..நண்பர்களே சிந்தியுங்கள் அந்த கோமாளி நடிகனை பார்க்க நீங்கள் விஷம் குடித்தோ உங்கள் உடலில் வாகனத்தி ஏற்றியோ என்ன பயன்….என்ன முட்டாள்தனம் இது…படம் நல்ல இருந்தால் ரசியுங்கள் அதோடு நிறுத்தி கொள்ளுங்கள்…….இப்படி ஒரு நிகழ்ச்சியை வேறு எந்த நடிகனுக்கும் வைக்காமல் விஜய்க்கு வைத்ததன் மூலம் விஜய் ரசிகர்கள் எவ்வளவு முட்டாள்கள் என்பதை உலகத்திற்கு காட்டி இருக்கிறார்கள்……

நன்றி :வில்லவன் . . .

அந்த கொடுமைகளை பாருங்கள்….

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . 12 மறுமொழிகள் »

Box office இல் பின்தங்கிய காவலன்….

சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சென்ற வார இறுதியில் ஆடுகளத்தை இரண்டாமிடத்துக்கு தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது, கார்த்தியின் சிறுத்தை. வெளியானது முதல் மூன்றாவது இடத்திலேயே உள்ளது விஜய்யின் காவலன்.

காவலன் சென்ற வார இறுதியில் 47.9 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரையான அதன் மொத்த சென்னை வசூல், 1.51 கோடி.

இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கும் ஆடுகளம் சென்ற வார இறுதியில் 49.07 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரையான ஆடுகளத்தின் சென்னை வசூல், 1.70 கோடி.

சிறுத்தை சென்ற வார பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல், 62.51 லட்சங்கள். காவலன், ஆடுகளம் இரண்டையும்விட மிக மிக அதிகம். இதுவரையான சிறுத்தையின் சென்னை வசூல், 1.98 கோடி.

சென்ற வார இறுதி வசூலில் மட்டுமில்லாது மொத்த வசூலிலும் விஜய்யின் படம் பின்தங்கியே உள்ளது. பாக்ஸ் ஆஃபிஸின் நான்காவது இடத்தை இளைஞனும், ஐந்தாவது இடத்தை மன்மதன் அம்பும் பிடித்துள்ளன.

Source :  webdunia.com

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »

விஜயின் காவலன் பற்றி மனம் திறந்த கமல்…(video)

விஜய் பற்றி கமல் ரொம்ப அருமையாக சொல்லி இருக்கார் …!!

 

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

நாகரிகம் அறியாத பொறாமை பிடித்த விஜய் ரசிகர்கள்…..!!

என்ன தான் விஜயின் காவலன் பாராட்டப்பட்டாலும் பொங்கல் ரேசில் ஆடுகளம் காவலனை விட ஒரு படி மேலே தான் நிற்கிறது.ஆடுகளம் மட்டும் இல்லை என்றால் விஜய் ரசிகர்களின் ஆட்டம் தான்கமுடிஆமல் இருந்திருக்கும்.இப்பொழுது ஆடுகளத்தால் தமது தளபதியின் வெற்றி என்று சொல்லமுடியாத நிலையில் இருக்கும் இவர்கள் , அதை பொறுக்கமுடியாமல் தனுஷின் ஆடுகள போஸ்டர்களை கிழித்தும் அருகிலிருந்த விஜய் போஸ்டர்களுக்கு பாலூற்றியும் தமது காழ்ப்புணர்வை காட்டியுள்ளனர்.இவ்வாறான கீழ்த்தரமான ரசிகர்கள் இருக்கும் வரை விஜய் முன்னேறுவது கஷ்டம் தான்.
வீடியோ ஆதாரம் கீழே :-

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . 28 மறுமொழிகள் »

அசினும் சல்மான்கானும் ரகசிய டும் டும்?

அசினுக்கும் சல்மான்கானுக்கும் ரகசியத் திருமணம் நடந்ததாக படத்துடன் செய்தி வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழில் முன்னணி நடிகையாக இருந்த அசின் கஜினி படம் மூலம் இந்திக்கு போனார். தற்போது சல்மான் கான் ஜோடியாக ரெடி படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே லண்டன் டிரீம்ஸ் படத்திலும் இருவரும் சேர்ந்து நடித்தனர்.

சல்மான்கானுக்கும் அசினுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கள் வெளியாகி வருகின்றன. அசினுக்கு மும்பையில் சல்மான்கான் வீடு வாங்கி கொடுத்ததாகவும் பிறந்த நாளுக்கு விலை உயர்ந்த காரை பரிசாக அளித்ததாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் நேற்று இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக மும்பை, கேரள பத்திரிகைகள் பரபரப்பு செய்தி வெளியிட்டன. பஞ்சாபி முறைப்படியும், அசின் பெற்றோருக்கு தெரியாமல் இந்த திருமணம் நடந்ததாகவும் கூறப்பட்டது.

இருவரும் திருமண கோலத்தில் இருப்பது போன்ற படமும் வெளியிடப்பட்டது. ஆனால் விசாரித்ததில் இந்தப் புகைப்படம் ரெடி படத்துக்காக எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இது பற்றி அசினிடம் கேட்ட போது, “எனக்கும் சல்மான்கானுக்கும் திருமணம் நடந்து விட்டதாக வெளியான செய்தியைhd பார்த்து சிரிப்புதான் வந்தது.

கேரளாவிலிருந்து நிறைய பேர் எனக்கு போன் செய்தார்கள். அம்மா, அப்பாவுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டாயே இது நியாயமா? என்று கேட்டனர். மனதுக்கு கஷ்டமாக இருந்தது. ரெடி படத்தில் சல்மான்கானும் நானும் நடித்து வருகிறோம்.
அந்த படத்தில் எங்களுக்கு திருமணம் நடப்பது போன்ற ஒரு காட்சி வருகிறது. அதனை யாரோ போட்டோ எடுத்து நிஜமாகவே திருமணம் நடந்ததாக வெளியே பரப்பி விட்டுள்ளனர்…”, என்றார்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »
Follow

Get every new post delivered to your Inbox.

Join 92 other followers