இவ்வளவு நாகரீகம் மற்றும் தொழினுட்பம் வளர்ச்சியடைந்த காலத்திலும் ஏன் வெளிநாடு சென்றும் கூட சில முட்டாள் யாழ்ப்பானதார்களுக்கு சாதி வெறி மாறவில்லை.
யாழ்ப்பாணத்து சாதிக் கொடுமையால் மகளின் காதலுக்கு வில்லனாக மாறிய தகப்பனுக்கு கனேடிய நீதிமன்றம் ஒன்று ஐந்து வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்து உள்ளது.
இளைய மகள், இளைய மகளின் காதலன், மூத்த மகளின் கணவன் ஆகியோரை 2007 ஆம் ஆண்டு வாகனத்தால் மோதி கௌரவக் கொலை செய்ய முயன்றார் என்று குற்றஞ்சாட்டி ஒன்ராரியோவில் உள்ள உயர்நிலை நீதிமன்றம் ஒன்றில் Scarborough நகரவாசியான செல்வநாயகம் செல்லத்துரை ( வயது-47) என்பவருக்கு எதிராக வழக்கு இடம்பெற்று வந்துள்ளது.
இம்மூவர் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தினார் என்கிற குற்றச்சாட்டை செல்வநாயகம் ஒப்புக் கொண்டார். இதனால் இவருக்கு எதிரான படுகொலை முயற்சிக் குற்றச்சாட்டை சட்டமா அதிபர் திணைக்களம் வாபஸ் பெற்றுக் கொண்டு மூவர் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தினார் என்று குற்றச்சாட்டில் திருத்தம் கொண்டு வந்தது.
இக்குற்றச்சாட்டுக்கு அதிக பட்சத் தண்டனை 14 வருட கடூழிய சிறை. நேற்று இவ்வழக்கு தீர்ப்புக்காக நீதிபதி John McMahon முன்னிலையில் வந்தது. சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து ஆஜரான அரசுத் தரப்பு சட்டவாதி குற்றவாளிக்கு ஆறு வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என்று கோரினார்.
எதிரி தரப்பில் ஆஜரான சட்டத்தரணி இவ்வழக்குக்காக அவரது கட்சிக்காரருக்கு ஐந்து வருட தண்டனைதான் வழங்க வேண்டும் என்று கோரினார். ஐந்து வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார் நீதிபதி.
இவ்வழக்குக்காக ஏற்கனவே செல்வநாயகம் 11 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்துள்ளார். எனவே அவர் இன்னமும் 49 மாதங்கள் கடூழிய சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்.
குற்றவாளி மிகப் பாரிய குற்றச் செயலை இழைத்திருக்கின்றார் என்று நீதிபதி தீர்ப்பில் சுட்டிக் காட்டினார். வழக்கின் தீர்ப்பு தமிழ் உரை பெயர்ப்பாளர் மூலம் குற்றவாளிக்கு நீதிமன்றில் உரை பெயர்த்துக் கூறப்பட்டது.

நேற்றைய தினம் பல புலம்பெயர் ஊடகங்களிலும் வெளியான ஒரு செய்தி.“தவறான நடத்தை காரணமாக சுண்டிக்குளி மாணவி பாடசாலையிலிருந்து இடைநிறுத்தம்“.இந்த செய்தியின் பின்னால் எமது இனத்தின் மனோநிலை எவ்வளவு பின்தங்கிய மற்றும் கேவலமானது என்று புரியும்.
அப்படி என்றால் அந்த புகைப்படத்தை வெளியிட்ட நபர்களை தேடி கைது செய்யவேண்டும்.ஆனால் அதைப்பற்றிய சிந்தனையே இல்லாத இந்த யாழ் சமூகம் ஒரு பெண்ணை இப்படி அநியாயமாக தண்டிக்கிறது.அந்த பெண் என்ன நித்யானந்தா போன்று காவி உடை போர்த்திவிட்டா இப்படி செய்தார்.அந்த வயதில் அனைவருக்கும் வரும் காதல் தான் இவருக்கும் வந்திருக்கிறது.ஏதோ துரதிர்ச்டவசமாக படம் இணையத்தில் வெளியானத்ர்க்காக இப்படியா இந்த சமூகம் தன் கோரமுகத்தை காட்டுவது? அப்படிஎன்றால் காதலிப்பதே தவறு என்று கூறவருகிரார்களா இந்த பாடசாலை நிர்வாகமும் ஊடகங்களும்.
காதலிக்கும் போது தன் துணையை முத்தமிடாதவர்கள் எத்தனை பேர் நீங்களே உங்கள் நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள்.புலம்பெயர்ந்தவர்களே உங்களுக்கு நன்றாக தெரியும் உங்கள் பெண்பிள்ளைகள் எவ்வாறான உடைகளுடன் நைட் கிளப் கலீல் அதிகாலைவரை கண்டவனுடனும் குடித்துவிட்டு ஆட்டம்போடுகிரார்கள் என்று.இந்த மாணவி ஒரு மாணவனை காதலித்து அவனுக்கு முத்தம் கொடுத்தால் வலிக்கிறதா உங்களுக்கு?அங்கெ உங்கள் பெண்கள் பல காதலர்களுடன் ஆட்டம் போடுவதற்கு இட வசதி பூங்கா விடுதிகள் தனி அறைகள் என்று எவ்வளவோ வசதயுண்டு.ஆனால் யாழ்ப்பாணத்தில் காதலர்கள் தனியாக பேசிக்கொள்ள நாகரிகமான இடம் ஏதுமுண்டா?அப்படி ஏதும் இருக்கத்தான் விட்டுவிடுவீர்களா?உங்களைபோருத்தவரையில் வெளியில் தெரியாமல் எத்தனை பேரோடும் சுற்றலாம் அதெல்லாம் கலாசாரம்.ஒருவனை காதலிப்பது வெளியில் தெரிந்தால் அது கலாச்சார சீரழிவா?
இதை அவர் என்ன நோக்கத்திற்காக செய்தாரென்பது அவருக்குத் தான் வெளிச்சம் ஆனால் இதனால் பத்திற்கு மேற்பட்ட வறியவர்கள் பார்வையை இழந்திருக்கிறார்கள். இதற்கு அசின் பதில் கூற முடியாது தான் அப்படியானால் யார் பதில் கூறுவது. அப்படியானால் செய்த மருத்தவரின் கழுத்தைப் பிடிப்போமா..? (அவர் ஒப்பம் அருகே காட்டப்பட்டள்ளது)

