சரத் பொன்சேகாவைக் கொன்று நானும் தற்கொலை செய்வேன்: மேர்வின் சில்வா

Photobucket
பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாத்த கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட படைத் தரப்பு முக்கியஸ்தர்களைக் காட்டிக் கொடுக்கும் நடவடிக்கையில் சரத் பொன்சேகா இறங்கினால் அவரைக் கொன்று விட்டுத் தானும் தற்கொலை செய்யப் போவதாக கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதியமைச்சருமான மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் கிரிபத்கொட பகுதியில் இடம்பெற்ற சரத் பொன்சேகாவிற்கு எதிரான ஆரப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

சர்வதேச நீதிமன்றத்தில் எமது நாட்டைக் காத்த வீரர்களை காட்டிக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளில் இரகசியமான முறையில் சரத் பொன்சேகா ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டிய மேர்வின் சில்வா இதனைப் பார்த்துக் கொண்டு தாம் சும்மா இருக்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.

கமல் குணரட்ன, சவேந்திர சில்வா, ஜகத் டயஸ் உள்ளிட்ட படை அதிகாரிகளை யுத்தக் குற்றவாளிகளாகச் சித்தரிப்பதற்கு சரத் பொன்சேகா முயன்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Photobucket

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

பிரபல நடிகையும் – இயக்குநரும்: இரகசிய போட்டோ-வீடியோ அம்பலம்: செல்போன் சேவிஸ் செய்யும் போது காட்சிகள் சிக்கியது

செல்போன் சேவிஸ் செய்யும் போது நிறைய ரகசியங்கள் வெளி வருகின்றன. தற்போது நடிகையும் இயக்குநரும் இருக்கும் ரகசிய உறவு அம்பலமாகியுள்ளது.

கன்னட இயக்குனர் ரத்னஜா இயக்கத்தில் பிரபல கன்னட நடிகை அமுல்யா பிரேமிசம், நெனபிரலி ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார்.

முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்து முன்னணியில் இருப்பவர் அமுல்யா. இந்நிலையில் அமுல்யா, ரத்னஜாவு இருவரும் ரகசியமாக முத்தமிட்ட புகைப்படம் நேற்று பெங்களூரில் வெளியானது.

டெலிவிஷன்களிலும் பத்திரிகைகளிலும் இப்படம் வந்தன. இதனால் கன்னட திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. ரத்னஜாவும் அமுல்யாவும் அதிர்ச்சியானார்கள்.

ஒரு முத்தம் கொடுத்தால் அடுத்து நான் இயக்கும் இரு படங்களில் உன்னை கதாநாயகியாக நடிக்க வைப்பேன் என்று இயக்குனர் ஆசைகாட்டியதாகவும், அதனால் அமுல்யா இயக்குனருக்கு முத்தம் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தை ரத்னஜாவே தனது செல்போனில் படம் பிடித்து வைத்திருந்ததாகவும் அதை பழுதுபார்க்க கொடுத்த போது படம் வெளியாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தை வெளியிட்டவர் ரத்னஜாவுக்கு டெலிபோன் செய்து 1 கோடி கேட்டு மிரட்டியுள்ளார். பணம் கொடுத்தால் படங்களை வெளியிட மாட்டேன் என்றும் கூயிருக்கிறார். மேலும், ரத்னஜாவும் அமுல்யாவும் படுக்கையறையில் நெருக்கமாக இருப்பது போன்ற ஒரு நிமிட வீடியோ படமும் தன்னிடம் இருப்பதாக கூறியுள்ளார்.

கன்னட திரையுலகையே இந்த விசயம் பரபரப்பாக்கிக்கொண்டிருக்க, சம்பந்தப்பட்ட இயக்குநரும், நடிகையும் ‘’இது நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதில் இருப்பது நாங்கள் அல்ல. எங்கள் புகழை கெடுக்க சதி செய்கிறார்கள்’’என்று வேதனைப்படுகின்றனர்.

PhotobucketPhotobucketPhotobucket

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »

நடிகையுடன் கேரவேனுக்குள் நடந்த கூத்து!!

Photobucket
அமுல்பேபி நடிகருக்கு தமிழில் கொஞ்சம் மார்க்கெட் இருந்த நேரம். அவருக்கு ஜோடியாக நடிக்க வந்தார் அந்த ஆந்திர அழகுப் புயல். பார்க்க ரொம்ப ரொம்ப அழகாக இருந்தார். அவர் சிரிக்கும் போது விழும் கன்னக் குழியில் எத்தனை பேர் விழுந்து எழுந்தார்களோ தெரியவில்லை. நிச்சயம் தமிழ் ரசிகர்கள் அந்தக் குழி அழகில் விழுந்து விடுவார்கள் என்றுதான் அவர் நினைத்தார்.எண்களின் பெயரில் வெளியான படத்தில் ஹீரோயினாக நடித்தார். இரண்டே நாளில் படம் படுத்து விட நடிகைக்கோ ராசி இல்லாத நடிகை என்ற முத்திரை விழுந்துவிட்டது. கொஞ்ச காலம் காத்திருந்து பார்த்தார். ஆனால் ராசி இல்லாத நடிகைன்னு இன்டஸ்ட்ரி சொன்ன பிறகு யார்தான் போய் சீண்டுவார்கள் அவரை. எந்தப் படமும் கமிட் ஆகாததால் இதற்கு மேலும் சென்னை நமக்கு செட் ஆகாது என்று நினைத்து சொந்த ஊருக்கே ரயில் பிடித்தார்.
Photobucket

அப்போதைக்கு அவருக்கு அட்ஜெஸ்ட்மென்ட் பற்றி அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஊருக்கு போனவர் அங்கிருந்து தெலுங்கு சினிமாவிற்கு முயற்சித்துக் கொண்டிருந்தார். சில அட்ஜெஸ்ட்மென்ட்களுக்குப் பின்னர் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது தெலுங்கு படத்தில்.

அதன்பிறகு அவருக்கு கிடைத்த வாய்ப்பில் அம்மணி தீயாக நடித்தார். படமும் தீயாக ஓடியது. ரீ என்ட்ரி கொடுத்த அம்மணியைத் தேடி தமிழ் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் ஓடினார்கள். ஹீரோக்களோ அவருடன் நடிப்பதே தாம் செய்த புண்ணியம் என்பது போல் கருதினர். தெலுங்கில் இவர் நடத்திய டிஸ்கஸன்கள் ஏராளம்.தெலுங்குப் படப்பிடிப்பு ஒன்றில் கேரவேனுக்குள் டிஸ்கஸன் நடத்திய கூத்தும் அரங்கேறியிருக்கிறது. தெலுங்குப் படத்தில் முன்னணி ஹீரோவுடன் இணைந்து நடித்துக் கொண்டிருந்தார் நம்ம நடிகை. உணவு இடைவேளையின் போது நடிகையை போன் செய்து தமது கேரவேனுக்கு அழைத்தார் ஹீரோ. நடிகையும் வந்தார். ‘நல்லா நடிக்கிறீங்க… உங்க நடிப்பைப் பார்த்து நானே அசந்து போயிட்டேன்… நிச்சயம் உங்களுக்கு தேசிய விருது கிடைக்கப் போகுது பாருங்க…’ என்று அவர் சொல்ல மேடம் உச்சிக் குளிர்ந்துப் போனார். அவர் ஏகப்பட்ட சந்தோசத்தில் இருக்கும் போதே அடுத்த இன்ப அதிர்ச்சியையும் கொடுத்தார் நடிகர்.

‘என்னோட அடுத்த படத்திலும் நீங்க தான் ஹீரோயின்…’ என்று சொல்ல நடிகைக்கு கால் தரையில் இல்லை. ‘ரொம்ப தேங்க்ஸ் சார்..’ என்றார் கட்டுப்படுத்த முடியாத மகிழ்ச்சியுடன். பெரிய ஹீரோவே இப்படி பாராட்டுறார்னா சும்மாவா…? ‘அப்புறம்..’ என்று பேச்சை வேறு பக்கமாகத் திருப்பிய நடிகர் இரட்டை அர்த்த வசனங்களில் நடிகையை வர்ணிக்க ஆரம்பித்துவிட்டார். அவர் சுற்றி வளைத்து எங்கு வருகிறார் என்பதை புரிந்து கொண்டார் நடிகை. ஏற்கனவே சரியாக அட்ஜஸ்ட் செய்து கொள்ள தெரியாததால் தமிழிலும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இனிமேலும் அப்படி இருந்துவிடுவாரா என்ன…?நடிகை ஓ.கே. சொல்ல கேரவேனுக்குள்ளேயே இருவரும் சொர்க்கத்துக்குப் போய் வந்தார்கள். இவர்கள் கூத்து கேரவேனுக்குள் நடந்து கொண்டிருக்க மொத்த யூனிட்டும் உணவு இடைவேளையை முடித்துக் கொண்டு இவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தது.

அந்த ஒரே படத்தின் மூலம் உச்சத்துக்குப் போய்விட்ட நடிகை பின்பு தமிழக்கு வந்தார். உயரம் கொஞ்சம் அதிகம் என்றாலும் இவருடன் ஜாலியாக டூயட் பாட எல்லா ஹீரோக்களும் போட்டி போட்டனர். அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. ஒரு காலத்தில் ராசியில்லா நடிகை என்று ஒதுக்கியவர்களே இன்று போட்டி போட்டுக் கொண்டு தம்முடன் ஆட அழைக்கிறார்களே என்று.

இங்கேயும் அவரை டிஸ்கஸனுக்குக் கூப்பிட்டாலும் அது தெலுங்கு பட உலகில் இருப்பது போல் இல்லையாம். ‘தெலுங்கில் டிஸ்கஸனுக்கு அடிக்கடி கூப்பிடுவார்கள்… இங்க அப்படி இல்ல…’ என்று தமிழ் சினிமாவைப் பார்த்து கொஞ்சம் ஆறுதல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »