பெங்களுரில் பெண்ணை ஆபாச படம் எடுத்த கடைக்காரருக்கு தர்மஅடி

கடைக்கு வந்த இளம்பெண்னின் முகத்தில் மயக்க ஸ்பிரே தெளித்து ஆபாச புகைப்படம் எடுத்த கடைக்காரரை பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். பெங்களூர் மூடளப்பாளயா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோகன் என்ற 35வயதுடைய ஆசாமி தனது கடைக்கு பொருள் வாங்க வந்த பெண்ணிடம் பேச்சுக் கொடுத்து உட்கார செய்துள்ளார். பி.கொம் படிக்கும் அந்த 21வயது இளம்பெண் அசந்த நேரத்தில் மயக்கஸ்பிரே அடித்துள்ளார். பெண் மயங்கியவுடன் ஆடைகளை களைந்து ஆபாசப் படங்கள் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சற்றுநேரத்தில் நினைவு திரும்பியதும் நிலைமையை உணர்ந்து அதிர்ந்த இளம்பெண்ணிடம் 1லட்சம் ரூபா கொடு இல்லையேல் ஆபாசப்படங்களை இன்டர்நெட்டில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். மிரண்டு போய் வீட்டிற்கு வந்த பெண் பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். இதனையடுத்து பெண்ணி;ன் உறவினர்கள் அப்பகுதி பொதுமக்கள் கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் எல்லோரும் ஒன்றுசேர்ந்து கடைக்காரரை வீதியில் இழுத்துப் போட்டு தர்மஅடி கொடுத்துள்ளனர். பின்னர் சந்திரா லேஅவுட் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »