விடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்!

விபச்சார வழக்கில் ஒரு நடிகை சிக்கியபோது அது குறித்து செய்தி வெளியிட்டதும் நடிகர் சங்கம் கண்டன கூட்டம் என்ற பெயரில் எவ்வளவு கீழ்த்தரமாக பேசினர் என்பதை வாசகர்கள் அறிவார்கள். பத்திரிகையாளர்கள் குடும்பத்தினரையும் சந்திக்கு இழுத்தனர். ஆனால் நடிகைகளின் உண்மையான முகம் என்ன? என்பதைப் புகைப்பட ஆதாரத்துடன் குமுதம் ரிப்போர்ட்டர் வெளியிட்டிருக்கிறது. அதை அப்படியே உங்கள் பார்வைக்கு தருகிறோம். நடிகைகைளின் உண்மை முகங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். சினிமா நடிகைகள் ஸ்ரேயா, ரீமா சென் மற்றும் துணை நடிகைகள் கையில் மதுக்கோப்பையுடன், அரைகுறை ஆடையுடன், அஜால் குஜாலாக இருக்கும் காட்சிகள் வெளிவந்துள்ளன. இவர்கள் ஆறு ஆண்கள், எட்டு பெண்கள் என 14 பேர் விடிய விடிய நடத்திய விருந்து, வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சென்னையில் இயற்கை எழில் கொஞ்சும் கிழக்கு கடற்ரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளில், இதுபோன்று நடிகைகள் பொழுதைக் கழிப்பது, வழக்கம் தானாம். மூச்சு முட்ட சினிமாவில், சம்பாதிக்கும் பணத்தை, இதுபோன்ற கேளிக்கை, ஆபாச குத்தாட்டங்களால் ஒரே இரவில், சில மணி நேரங்களில், சம்பாதித்து விடுகின்றனராம்.

ஒருபுறம் நடிகை ரஞ்சிதா, சுவாமி நித்தியானந்தாவுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி நடிகைகளின் முகத்திரையை கிழித்துள்ள நிலையில், மறுபுறம் நடிகைகளில் உண்மையான முகங்கள் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. “உள்ளதை சொன்னால், உண்மை செய்திகளை வெளியிட்டால் “மஞ்சள்’ பத்திரிகை என்று வாய் கூசாமல் பேசுபவர்கள், இந்த செய்திகளுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கப் போகிறார்களா? “பச்சையாக’ சொல்லப் போனால், கோலிவுட் ஏரியா கொஞ்சம் கொஞ்சமாக “சிவப்பு விளக்கு’ பகுதியாக மாறி வருகிறது. பகிரங்கமாக, இதுபோன்ற “நீலப்’ படங்கள் எடுக்கும் பகுதியாக மாறினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை’ என்று சினிமா விமர்சகர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

யார் தவறு செய்தாலும், அது அரசியல்வாதியாக இருந்தாலும், ஆன்மிகவாதியாக இருந்தாலும், சினிமாக்காரர்களாக இருந்தாலும், சுட்டிக் காட்டுவதும் தட்டிக் கேட்பதும் தான் பத்திரிகைகளின் வேலை. இதுபோன்று செய்திகள், சந்திக்கு வந்து விட்ட பிறகாவது, தமிழ்த் திரையுலம் தன்னைத் தானே சுய பரிசோதனை செய்து கொள்ளட்டும்.

Daily News இல் பதிவிடப்பட்டது . 2 Comments »

யாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் !!

யாழ் பல்கலை துணை வேந்தர்  வசந்தி அரசரத்தினம் நிர்வாக திறமை அற்றவர்  என்ற கருத்து மாணவர்கள் மத்தியிலும் கல்வியாளர் சமூகத்தின் மத்தியிலும் பரவ அராம்பித்துள்ளது .இதற்க்கு காரணம் தமிழ் மாணவர்கள் மீது இவர் காட்டும் பாரபட்சம் தான். சிங்கள மாணவர்கள் எந்த விதமான சீரழிவு நடவடிக்கையில் ஈடுபட்டாலும் கண்டு கொள்ளாமல் விடும் இவர் தமிழ் மாணவர்கள் விடும் சிறு தவறுகளுக்கும் பழி வாங்கும் குணத்தை காட்டி வருகிறார்.இவ்வளவுக்கும் இவர் ஒரு தமிழர் என்றதை இவரே மறந்து விட்டார் போலும் .நீங்கள் தமிழினத்துக்கு துரோகம் இழைக்கலாம் ஆனால் தன் சொந்த இனத்தவனை இன்னொருவனை விட குறைத்து நடத்தும் இவரை போன்றவர்களை என்ன செய்வது !

அண்மையில் விஞ்ஞான பீடத்தை சேர்ந்த சிங்கள மாணவனும் மாணவியும் மாலை 5 மணி அளவில் பல்கலை வளாகத்தினுள் ஒருவர் மீது இன்னொருவர் அமர்ந்தவாறு தகாத உறவில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டும் துணை வேந்தர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இது தொடர்பாக பல்கலை மாணவர்கள் பலரும் விசனம் வெளிடியிட்டும் எந்த ஊடகமும் இது பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை .

அண்மையில் சிங்கள மாணவர்கள் கை கலப்பில் ஈடுபட்டு பலர் வைத்தியசாலைக்கு சென்றும் வந்தனர் அவர்களுக்கு இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை ஏன் என்றால் அவர்கள் சிங்களவர்கள்.ஆனால் கைகலப்பில் ஈடுபட்ட தமிழ் மாணவர்களுக்கு மட்டும் வகுப்பு தடை இது எந்த விதத்தில் ஞாயம். விரிவுரையாளர்கள் இது தொடர்பாக மௌனம் சாதிப்பது ஏன்?

Daily News இல் பதிவிடப்பட்டது . 1 Comment »

யாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்!!

பல்கலைக்கழகத்திலிருந்து தூக்கப்பட்டார் இளங்குமரன்

யாழ்பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் இருந்து கொண்டு மாணவிகளுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த பொருளியல் துறை விரிவுரையாளர் இளங்குமரன் தற்காலிகமாக பணியில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளார்.

இவர் பரீட்சை வினாத் தாள்களை பெற்றுக்கொள்ள ஒரு சில மாணவிகளை தனது வசிப்பிடத்திற்கு வரசொன்னமை போன்ற பல குற்ற சாட்டுக்கள் வெளி வர ஆரம்பித்திருக்கிறது

இன்று பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கடுமையான வாதபிரதி வாதங்கள் இடம்பெற்றுள்ளன
அண்மையில் கலைப்பீட மாணவர்கள் சிலர் விரிவுரையாளர்களுடன் எதிர்த்து பேசியதற்கு 13 மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டது
இதனால் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கலைப்பீட மாணவர் ஒன்றியம் சில விடயங்களை துணைவேந்தரிடம் கேட்டிருந்தது அதாவது விரிவுரையாளர்களிடம் எதிர்த்து பேசியதற்காக மாணவர்களை தண்டிக்கின்றீர்

ஆனால் மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் விரிவுரையாளர்களுக்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என பகிரங்கமாக கேள்வி கேட்டது ஆனால் இந்த விடயத்தில் ஒன்றியம் தேவையில்லா வேலைகளில் ஈடுபட வேண்டாம் என கூறினார் துணைவேந்தர்

ஆனால் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக இருக்கும் விரிவுரையாளர்கள் ஒரு சிலர் இக் கருத்தினை கடுமையான முன்வைத்தனர்

மாணவர்களுக்காகவே பல்கலைக்கழகம் எனவே மாணவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அதனை நிர்வாகம் தீர்க்க வேண்டும் என்று திடமாக வாதாடினார்கள் .

இவ்வாறான வார்த்தை பிரயோகங்களை கேள்வியுள்ள துணைவேந்தர் பயந்து போன துணைவேந்தர் இளங்குமரன் கல்வி மற்றும் கற்பித்தல் செயற்பாடுகளிலிருந்து இன்று முதல் தற்காலிகமாக தூக்கப்பட்டுள்ளார்
இவருடைய பதவி மற்றும் கல்வி கற்பிக்கும் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டமை கலைப்பீட மாணவர் ஒன்றியத்திற்கு கிடைந்த வெற்றி

ஆனால் இவருக்கு ஆதரவாக பெண் விரிவுரையாளர்களும் {குறிப்பாக கலைப்பீடத்தில் விரிவுரைகளை நிகழ்த்தும் விரிவுரையாளர்கள்} வாதாடியதாக தெரிவிக்கப்படுகிறது}

இன்னும் சில விரிவுரையாளர்கள் திரை மறைவில் உள்ளார்கள் இவர்களுக்கும் இந்த செய்தி சமர்பணம் திருந்துங்கள் அல்லது திருத்தப்படுவீர்கள்’

மாணவர் சக்தி மாபெரும் சக்தி.

Daily News இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

தமிழர் ஏன் தீபாவளியை புறக்கணிக்க வேண்டும் !!

வருடா வருடம் கடவுள்களுக்கு (சாமிகளுக்கு) கலியாண உற்சவம் வருவது போல் வருடா வருடம் தீபாவளி போன்ற பண்டிகைகளும் வந்து கொண்டு இருக்கின்றன.
நம் மக்களும் பெரும்பான்மையோர், கடவுளுக்கு உலகில் வேறு எங்காவது கலியாணம் செய்வாருண்டா? கடவுள்தானா கட்டும், கலியாணம் செய்துகொள்ளுமா? அதற்கு அவசிய மென்ன? என்கிற அறிவே சிறிதுமின்றி எப்படி கோயில்களில் ஆண்டுதோறும் சாமிகளுக்குக் கலியாண உற்சவம் செய்கிறார்களோ அதே போல் இந்த தீபாவளி முதலிய பண்டிகைகளை நம் மக்கள் அனேகம் பேர் கொண்டாடி வருகின்றார்கள்.

இந்த தீபாவளிப் பண்டிகையின் உண்மை என்ன? அதன் தத்துவம் என்ன? என்பது பற்றி நம் மக்களுக்குக் கவலையிருப்பதில்லை. ஏதாவதொரு சாக்கு சொல்லி பண்டிகைகள் கொண்டாடவேண்டும். கடவுள் பக்தி, மத பக்தி உள்ளவர்களாகக் காட்டிக் கொள்ள வேண்டும். அதன் மூலம் சிலர் (வியாபாரிகள்) பணம் சம்பாதிக்கலாம் என்கிற கருத்தைத் தவிர நம் மக்களுக்கு அவற்றின் உட்கருத்தை அறிவது என்கிற உணர்ச்சியோ கவலையோ இருப்பதில்லை.

சாதாரணமாக நம்மைப் போல் உள்ள ஒரு மனிதனை நாம் பிராமணன் என்று கருதி அவனை பிராமணன் என்றே அழைக்கின்றோம் என்றால் அதன் கருத்தென்ன? என்பது பற்றிச் சிந்திப்பதே இல்லை. ஒருவனை நாம் பிராமணன் என்றால் நாம் யார்? அவனை பிராமணன் என்று அழைப்பதால் நம்மை நாம் எந்தப்படியும் நினைத்துக் கொள்ளவில்லை என்றாலும் கூட தன் கருத்து என்ன ஆகியது? அவனை பிராமணன் என்று அழைப்பதால் நாம் நம்மை சூத்திரன் என்றே ஒப்புக் கொண்டதாகத்தானே ஆகிறது. இந்த அறிவுத் தெளிவு இல்லாததனாலேயே நம்மைப் போன்ற ஒரு மனிதனை பிராமணன் என்று அழைக்கின்றோம்.

நாம் ஏன் தீபாவளி போன்ற பண்டிகைகளைக் கொண்டாடாமல் வெறுத்து ஒதுக்க வேண்டுமென்பதுமான விஷயங்களைப் பற்றிய பிரசாரங்களும் வேண்டுகோள்களும் செய்து வருவதன் நிலையுமாகும்.

அது போலவே இக்காரணத்தினால்தான் அதாவது நம்மை இந்த இழிநிலையிலேயே அழுத்தி வைத்திருக்க வேண்டுமென்ற காரணத்தால்தான் இந்த நடத்தைகளால் பலனடைந்து நம்மை இழிவுபடுத்தி ஒடுக்கி வைத்திருக்கும் பார்ப்பனர்கள் என்பவர்களின் உற்சவம், பண்டிகை, வர்ணாசிரம சாதிக்கிரமம், அவற்றை அனுசரித்த ஆதராங்களாகிய வேதசாஸ்திர புராண இதிகாசம், அவை சம்பந்தமான இலக்கியம் முதலியவை காப்பாற்றப்படவும் பிரசாரம் செய்வதும், இயல், இசை, நாடகம் மூலம் அவற்றைப் பரப்பி வருவதுமான எதிர் முயற்சிகளும் ஆகும்.

இது பழைய போராட்டமே

இந்த இரண்டு போராட்டங்களும் இந்த நாட்டில் இன்று நேற்றல்ல, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடந்து வந்திருக்கின்றன என்பதை நாம் இன்று அதிகாரப் பூர்வமாக காணலாம். ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடந்து வந்திருக்கிறது என்பதைக் காட்டுவது தான், அதை ஆதிரிக்கத் தூண்டுவதுதான், அந்தத் தன்மையை நிலைத்திருக்கச் செய்வதுதான் இன்றைய உற்சவம், பண்டிகை முதலிய காரியங்களாகும்.
எதனால் இதை இந்தப்படி நாம் சொல்கிறோம் என்றால் ஏறக்குறைய 100 க்கு 90 க்குக் குறையாத உற்சவங்கள், பண்டிகைகள், நல்ல நாள், கெட்ட நாள், ஏற்பாடுகள், கொண் டாட்டங்கள், விரதங்கள், நோன்புகள் முதலிய அனேக காரியங்களுக்கும் இந்தப் புராண இதிகாசங்களும், சமுதாய நடப்புகளுக்கான சாஸ்திர தர்மங்களுமே காரணங்களாக இருந்து வருவதாலேயே இப்படிக் கூறுகிறோம். இந்தக் காரணங்களால், பிராமணன் என்பதாக ஒரு சாதி மகன் இருக்கவும், சூத்திரன் என்பதாக ஒரு சாதி மகன் இருக்கவும் நாமே இடங்கொடுத்து உதவி செய்தவர்களாகி விடுகிறோம். இதனால் பார்ப்பனர்கள், தாங்கள் பிராமணர்கள் (உயர்சாதி) என்று எண்ணிக் கொண்டு நம்மை சூத்திரர்கள் என்றே கருதி மற்றெல்லா விஷயங்களிலும் நம்மைக் கீழ்ச் சாதி மக்களாகவே நடத்தி வருகிறார்கள்.
இது போலவே நாம், இந்த தீபாவளி போன்ற பண்டிகைகளைக் கொண்டாடுவதன் மூலம் நாம், நம் இழிநிலையை உணராத – மான உணர்ச்சியற்ற மக்களாக ஆகி வேறு யாராவது நமது இழிநிலை ஒழிப்புக்காகச் செய்யும் முயற்சிகளுக்கும் முட்டுக் கட்டைப் போட்டவர்களாகி நம் பின் சந்ததிகளுக்கும் மான உணர்ச்சி ஏற்டாமலும் இழிவு படுத்தப்படவும் ஆதரவு தேடி வைத்தவர்களாகி விடுகிறோம்.

இன்று நம் நாட்டில் அரசியல், பொருளியல், கல்வி இயல், சமய, சமுதாய இயல் என்பவைகளின் பேரால் செய்யப்படும் கிளர்ச்சிகளும், குறிப்பாக திராவிடர் கழகத்தாரால் செய்யப்படும் கிளர்ச்சிகளும், மற்றும் பல பொது முயற்சிகளும் எதை அடிப்படையாகக் கொண்டவை என்று சிந்திப்போமே யானால், உண்மையில் அதன் அடிப்படைத் தத்துவம்.,
நம் மக்கள் பெரும்பாலோருக்கு அதாவது 100-க்கு 90 பேருக்கு இருந்து வரும் பிறவி இழிவும், அவ்விழிவு காரணமாக நமக்கு இருந்து வரும் பல உரிமை மறுப்புகளும், முன்னேற்றத் தடைகளும் ஒழிய வேண்டும், ஒழிக்கப்பட வேண்டுமென் பதும்,
நம் எதிரிகளால், அதாவது நம்மை இழிவுபடுத்தி வைத்து நம் உழைப்பால் சுகம் அனுபவத்துக் கொண்டு மக்களின் இந்த நிலையை இப்படியே நீடித்து இருத்தி வைத்திருக்க வேண்டும் என்பதுமான, ஒரு போட்டா போட்டி முயற்சியேயாகும் என்பது புரியும்.

இம்முயற்சி காரணமாகத்தான் நாம் ஏன் ஒருவனை பிராமணன் என்று அழைக்கக்கூடாது என்பதும், நாம் ஏன் உற்சவாதி பண்டிகைகளைக் கண்டிக்க வேண்டும் என்பதும் ஆகும்.
உதாரணமாக கடவுள் அவதாரங்கள், கடவுள் செய்த யுத்தங்கள், கடவுள் செய்த (சம்மாரக்) கொலைகள், கடவுள் செய்த வஞ்சக (கபடநாடக)ச் செயல்கள், கடவுள் காலடியில் அழுத்தி மிதித்துக் கொண்டு இருக்கும் சூர, அசுர, ராட்சதாதிகள் முதலியன யாவும் எதற்காக என்று பார்த்தோமானால், இது நன்றாக விளங்கிவிடும்.

கந்த புராணம், பாகவத புராணம், இவை சம்பந்தமான மற்ற இதிகாசங்கள் முதலியன யாவும் சாதிப் போராட்டமாகவும், பிறப்புப் போராட்டமாகவுமே இருந்து வருவதோடு மேல் சாதி என்பதை ஒப்புக் கொள்ளாமல், மேல் சாதி சம்பிரதாயத்தையும், உரிமையையும், நடப்புக்களையும், கீழ்ச்சாதியார் எதிர்த்துச் செய்த புரட்சியான போராட்டங்களாகவே இருந்து வரும்.

இதுதான் தேவாசுர (சுரர் – அசுரர்) போராட்டமாகவும், இராட்சத சம்மாரங்களாகவும் இன்றும் கருதப்பட்டு வருவ தாகும்.

தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் சிவன், கந்தன், காளி, விஷ்ணு அவதாரமான ராமன், கிருஷ்ணன், பலராமன், நரசிம்மன், வராகமூர்த்தி, முதலானவர்களும், சுரர் – அரக்கர் முதலியவர்கள் பிராமண தர்மத்தை எதிர்த்ததற்காகவே தோன்றி, எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், இந்தக் கொலைச் செய்கையைப் பாரட்டவும், கொலையைப் பற்றி மகிழ்ச்சியடையும்தான் பண்டிகை உற்சவம் கொண்டாடப்படுகிறது என்றும் கூறலாம்.

ராட்சதர்கள் யார்?

புராண இதிகாச அசுரர்கள், சூரர்கள், அரக்கர்கள், ராட்சதர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் யார்? தேவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் யார்? என்று பார்த்தோமேயானால் முறையே இந்த சூத்திரர்களும், பார்ப்பனர்களும் என்பவரல்லாமல் வேறு யாரைக் குறிக்கிறது? என்று யாராவது ஆதாரம் காட்ட முடியுமா? என்று பார்த்தால் முடியவே முடியாது என்பது அநேக அறிஞர்கள் ஆராய்ச்சியாளர்களால் மேதாவிகளால் எழுதப்பட்டிருக்கும் இன்றைய ஆராய்ச்சி நூல்களிலே அறியலாம்.

புராணங்களையே எடுத்துக் கொண்டாலும் பாகவத புராணத்தில் இரண்யன் வதைக் கதையில் இரண்யன்மீது சுமத்தப் பட்ட குற்றங்கள் இக்கருத்தைத் தெளிவாய் விளக்குகின்றன.
அதாவது இரண்யன் பார்ப்பனர்களுக்கு எதிரி, பார்ப்பனர்களின் உயர் சாதித் தத்துவத்தையும், அவர்களுடைய ஜப, தப மந்தரத் தத்துவத்தையும், ஒப்புக் கொள்ளாதவன், பார்ப்பனர் களை அடிமையாக்கிக் கொண்டு அவர்களிடம் வேலை வாங்கு கிறவன், இரண்யன் பிராமணர்களை ஆதரிப்பதற்கு ஆக இவர்களால் ஆக்கப்பட்ட விஷ்ணுவின் சகாயத்தினால் இவ்வளவு அக் கிரமங்கள் செய்வதால் இந்த விஷ்ணுவை முதலில் ஒழிக்க வேண்டும். இந்த விஷ்ணுவுக்கு ஆராதனம், எக்கியம், அவிர்ப் பாகம் செய்யும் பிராமணர்களை அடியோடு ஒழித்து ஆக வேண்டும். ஆதலால், ஓ! தானவர்களே (ஏவலாளர்களே) மண்வெட்டி, கோடரி, கடப்பாரை கொண்டு புறப்படுங்கள் ! பிராமணர்கள் ஜபதபம் ஓமம் செய்யுமிடத்தை அணுகுங்கள்! அவைகளைத் தரை மட்டமாக்குங்கள்! புறப்படுங்கள் ! என்று சொன்னதாக இரண்யன் மீது குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கிறது.

இப்படியே இரண்யன் தம்பி மீதும் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. அவன் பூமியையே பாயாகச் சுருட்டிக் கொண்டு ஓடி விட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.

இது போலவே இராவணன் மீதும், அவன் தேவர்களுக்கு விரோதமாக அவர்களின் யாகாதிகளை அழித்ததாகவும், பார்ப்பனர்களை வீட்டு வேலைக்கு வைத்துக் கொண்டு வேலை வாங்கியதாகவும், தேவர்களுக்குக் கேடு செய்ததாகவும் குற்றம் சுமத்தப் பட்டிருக்கிறது.
இது போலவே கந்த புராணத்தில் சூரன் மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.

இவைகள் நடந்தனவோ, இல்லையோ, உண்மையோ, பொய்யோ எப்படி இருந்தாலும் மேல் சாதி – கீழ்ச் சாதி, சூரர்-அசுரர், தேவர்-ராட்சதர்கள் என்னும் பேரால் யுத்தங்களும் தேவர்களால் மற்றவர்கள் கொல்லப்பட்டதுமான கருத்துக் களையும் சங்கதிகளையும் கொண்டதாக இருக்கின்றன என்பதும் யாராலும் மறுக்கமுடியாது. பாகவதத்தில் இரண்யன், பிராமணர்கள் மோசக்காரர்கள், பிராமணர்களை அழிக்க வேண்டும் என்றும் சாதி குறிப்பிட்டுச் சொன்னதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மற்றும் கந்தபுராணமும், இராமாயணமும் பார்த்தால் அவற்றில் வரும் பெயர்கள் மட்டும் வேறு வேறாக இருக்கின் றனவேயொழிய இரண்டும் ஒரே கதையைத்தான் குறிக்கின்றன. கருத்தும் தேவாசுர யுத்தம்தான் என்று எவரும் உணரலாம்.

எனவே இப்படிப்பட்ட அதாவது நமக்குக் கேடும் இழிவும் ஏற்பட்டதான போராட்டத்தில் வரும் உற்சவம், பண்டிகைகள் ஆகியவற்றை நாம் திராவிடர்கள், அதாவது சூத்திரர்கள் என இழித்துக் கூறப்படுபவர்களாகிய நாம் கொண்டாடலாமா? என்பதுதான் இன்றையப் பிரச்சினையாகும்.

அப்புடியே இதையும் புறக்கணிச்சிடுங்க

தீபாவளி

இப்படிப்பட்ட தத்துவம் கொண்ட பண்டிகைகளில் ஓன்றுதான் தீபாவளி! முதலாவதாக இந்தப் பண்டிகைக்கும், அதன் பெயருக்கும் சம்பந்தமே இல்லையெனலாம். தீபாவளி என்ற சொல்லுக்கு தீப வரிசை (விளக்கு வரிசை) என்றுதான் பொருள். கார்த்திகை மாதத்தில் இது போன்ற ஒரு பண்டிகை கொண்டாடுகின்றார்களே அது இந்தப் பெயருக்குப் பொருத்தமாகலாம். இந்த தீபாவளிப் பண்டிகை கொண்டாடவேண்டிய அவசியத்துக்காக குறிப்பிடும் நிகழ்ச்சி என்னவெனில்,

நரகாசுரன் என்ற ஒரு அசுரன் ஒரு தெய்வப் பெண்ணைச் சிறை பிடித்துக் கொண்டான். (கந்த புராணம் – இந்திரன் மனைவியை சூரன் சிறைப் பிடித்த கதை. இராமாயணம் – சீதையை இராவணன் சிறைப் படித்த கதை. தீபாவளி – நரகாசுரன் கசேரு என்ற பெண்ணை சிறை பிடித்த கதை). மற்றும் வேறொரு தெய்வப்பெண் அதிதி என்பவளின் காதணியை கவர்ந்து கொண்டவன். (எதற்காக எப்படிக் கவர்ந்தானோ தெரியவில்லை).
இது தவிர இவன் பிறப்பு வளர்ப்பும் அதிசயமானது. பூமியைப் பாயாகச் சுருட்டிய இரண்யாட்சனைக் கொல்ல மகாவிஷ்ணு பன்றியாகத் தோன்றி பூமாதேவியுடன் கலந்து பெற்ற பிள்ளை இவன்! பின் கிருஷ்ணனாலும் அவன் மனைவி யாலும் கொல்லப்பட்ட பின் தேவர்கள் சுகமடைந்தார்கள் என்பது கதை!
அந்த சுகத்துக்காகத்தான் நாம் மகிழ்ச்சி அடைய வேண்டுமாம். அதற்காக தீபாவளி கொண்டாட வேண்டுமாம்.

இதுதான் தீபாவளித் தத்துவம். கதையைக் கவனித்தால் இது சிறிதாவது மனிதத் தன்மைக்கோ, பகுத்தறிவுக்கோ ஏற்றதாக இருப்பதாக யாராவது சொல்ல முடியுமா? இத்தனை ஆபாசமும், அசிங்கமும் கொண்ட கதையை நாம் தெய்வீகத் தன்மை கொண்டதாக ஏற்று, ஏன் கதைவிட அல்லாமல் உண்மையில் நடந்த தெய்வக் கதையாக ஏற்றுக் கொண்டாடுவதா என்பது யோசிக்கத் தக்கதல்லவா?

நரகாசுரன் ஒரு திராவிட அரசனாகவும் திராவிடத்தை (வங்கத்தை)ச் சேர்ந்த ஒரு பிராகஜோதிஷம் என்னும் நகரை ஆண்டவனாகவும் அதே புராணங்களில் காணப்படுகின்றான். கதை எப்படியிருப்பினும், இவனும் – நரகாசுரனும், இரண்யாட்சன், இரண்யன், இராவணன், சூரபதுமன் முதலிய திராவிடர் தலைவர்களோடு ஒருவனாக மதிக்கப்பட வேண்டியவன் ஆவான். இவன் தன்னைப் பெற்ற தகப்பனால், தாயால் கொல்லப்பட்டதாகக் கதை கூறுகிறது. காரணம் தேவர் களுக்குத் தொல்லை கொடுத்ததால் என்கிறது புராணம்.
ஆகவே இன்று நாம் (திராவிடர்கள் – தமிழர்கள்) இரண்யனையும், இராவணனையும் எப்படிப் போற்றிப் புகழ்ந்து மரியாதை செய்கின்றோமோ அது போலவே நரகாசுரனும் நம் மரியாதைக்கு உரியவனாவான். ஆதலால் அப்படிப்பட்ட நம் தலைவனை தேவர் கூட்டம் கொன்றதற்கு நாம் துக்கப்பட வேண்டுமே ஒழிய மகிழ்ச்சியடைவது மடமையும் இழிவும், மான ஈனமுமாகும்.

ஆதலால், திராவிட மக்கள் அனைவரும், தீபாவளி பண்டிகையைக் கொண்டாடக்கூடாது என்று வேண்டிக் கொள்வதோடு, திராவிடர் கழகத்தவர் கண்டிப்பாகக் கொண்டாடக்கூடாது என்று தெரிவித்துக் கொள்கிறோம். தீபாவளியன்று கருப்பு உடை தரித்து நரகாசுரனுக்கு (திராவிடர் தலைவனுக்கு) வாழ்த்துக் கூறி வலம் வருவதுடன் ஆங்காங்கு கூட்டம் கூடி அவனது கொலைக்காக துக்கப்பட வேண்டியதை விளக்கி துக்க நாளாகக் கொள்ள வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

தமிழகத்தின் அன்ன ஹசாரே !!

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 2 Comments »

பேராசைக்காரர்கள் .இளைய தளபதி விஜய்யும், அவரின் அப்பா எஸ்.ஏ.சியும்.

தமிழ்நாட்டில் இன்று பேராசைக்காரர்கள் யாரென்று பார்த்தால் – இவர்கள் தான். இளைய தளபதி விஜய்யும், அவரின் அப்பா எஸ்.ஏ.சியும். மகனை அரசியலில் இறக்கி பெரிய ஆளாக்கி அழகு பார்க்க வேண்டும் என்று ஆசைப்படும் தந்தையர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. கலைஞர், மருத்துவர் ராமதாசு வரிசையில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரும் வருகிறார்.

“அரசியலில் குதிக்க – அதற்கான தகுதி, ஆளுமை போன்றவை இருக்கிறதா” என்றெல்லாம் யாரும் கேட்கக்கூடாது. கேட்கவும் முடியாது. பிள்ளை “ஆசைப்பட்டு விட்டால்” நிறைவேற்றுவது தானே பெற்றவர்களின் கடமை. அதை தான் எஸ்.ஏ.சந்திரசேகர் செய்கிறார். கிட்டத்தட்ட விஜய்யின் கொள்கை பரப்பு பீரங்கி போல செயல்பட துவங்கிவிட்டார் எஸ்.ஏ.சந்திரசேகர் என்று தான் சொல்ல வேண்டும்.

முன்பெல்லாம் பணம் படைத்தோர் – பணம் கொடுத்து, திரைப்படங்களில் கதாநாயகனாக ஆனார்கள். கதாநாயகனாக ஆனப்பின் – விஜயை போல “முதல்வர் கனவு” காண விரும்புகிறார்கள். “வருங்கால முதல்வர் விஜயாம்” கோஷமிடுகிறார்கள். காதில் ஆசிட்டை ஊற்றியது போல் எரிகிறது. ரஜினியை உசுப்பேத்த முடியாமல் ஓய்ந்தவர்கள்… இப்போது விஜயை. விஜ்ய்க்கு எல்லா கனவும் உண்டு. ரஜினியை போல விஜய் என்ன சாமியாரா?

“தன் படத்துல நடிச்ச விஜய்காந்தே அரசியல்ல இறங்கி எதிர்க்கட்சி தலைவராகும் போது – தம் பிள்ளையால் ஜெயிக்க முடியாதா” என்று பாசிட்டிவ்வா சிந்திக்கிறார் போலும் எஸ்.ஏ.சி. அ.தி.மு.க வின் தேர்தல் கூட்டணியில் இன்னும் வெளியேறாமல் இருப்பவர்கள் இரண்டே பேர். ஒருவர் – ​குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் மற்றது இளைய தளபதி விஜய்யின் மக்கள் இயக்கமாம். கலைஞர் அடிக்கிற ஆப்பிலிருந்து கூட தப்பி விடலாம். ஜெ அடிக்க போகிற ஆப்பிலிருந்து தப்பவே முடியாது என்பதை உணரவில்லை போலும்.

எந்த திரைப்பட விழாக்களிலும் கலந்து கொள்ளாத முதல்வராக ஜெயலலிதா. சினிமாகாரர்களை தூர வைக்கும் முதல்வர் வீட்டுக்கு அழையா விருந்தாளியாக சென்று, பூச்செண்டு கொடுத்து விட்டு பிரஸ்மீட்டில் பேசுகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். “உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.கவை ஆதரிப்பதாக” தெரிவித்தார். சினிமாகாரர்களை எரிச்சலுடன் சாடும் பா.ம.க வின் மக்கள் தொலைக்காட்சியையும் அந்த பிரஸ் மீட்டில் பார்க்க முடிந்தது. சினிமாகாரர்கள் என்றால் சும்மாவா? பா.ம.க.,வுக்கு தலைமுறையை தாண்டி – சினிமாவிலிருந்து எதிரிகள் முளைத்து கொண்டே இருக்கிறார்கள்.

தமிழர்களுக்கு சேவகம் செய்ய போவதாக சொல்லும் நடிகரின் தமிழர்களின் மீதானபற்றை பார்ப்போமா? ஆயிரக்கணக்கான ஏழை தமிழ் பொற்கொல்லர்களின் வயிற்றில் அடித்து தன் உடம்பை வளர்க்கும் கேரள ஆலுக்காஸ்களின் (இங்கே) நிரந்தர விளம்பர நடிகராக விஜய். பகட்டின் ஒளிக்கு பின்னால் கவிந்துள்ள இருட்டில் சிக்கி, சின்னாபின்னமாகி வாழவே போராடும் நம் மக்களை தெரிந்து கொள்ளாமல் – கோடிகளை மலையாளிகளிடம் பெற்று கொண்டு தமிழர்களை உய்விக்க இயக்கம் தொடங்க போகிறாராம். நல்ல கூத்து.

பிறந்த நாளுக்கு நான்கு தையல் மிஷின்களை கொடுத்து விட்டு, கொடுப்பது போல போட்டோவும் எடுத்து கொண்டால் – கிழவியை கட்டி பிடிப்பது போன்று போஸ்டர் அடித்தால் – அரசியலில் பெரிய ஆளாக வந்துவிடலாம் என்று நினைப்பு போலும். எந்த தகுதியில் அண்ணா வந்தது உங்களுக்கு அரசியல் ஆசை. இளைய தளபதி விஜய் கடந்து வந்த அரசியல் பாதையை பார்ப்போமா? புதுசாய் கட்சி ஆரம்பிக்கிற ரிஸ்க்கான வேலையையெல்லாம் செய்ய விரும்பவில்லை.

“சிவாஜி போல, பாக்யராஜ் டி.ராஜேந்தரை போல” கட்சி ஆரம்பித்து – “கடை விரித்தேன். கொள்வாரில்லை” என்று போணியாகமல் இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டால் என்ன செய்வது. அதனால் எப்பாடுபட்டாவது காங்கிரஸில் தன்னை இணைத்து கொள்ள விரும்பி, டெல்லி வரை போய் ராகுல்காந்தியை பார்த்தார் விஜய். “ஏற்கனவே கட்சில இருக்கிற கோஷ்டி பத்தாதுன்னு நீங்க வேற புதுசா”… என்று இழுத்திருக்கிறார் ராகுல்காந்தி.

தொண்டர்களின் எண்ணிக்கையை விட தலைவர்களின் எண்ணிக்கை நிறைய இருந்தால் – அது தான் நிலை. விஜய் தனது ஆசைகளை விரிவாக சொல்ல, “காங்கிரஸ்ல போஸ்டர் ஒட்ட ஆள் இல்ல. ஆனா போஸ்டிங் கேட்டு மட்டும் வந்துடுறாங்க” என்று ராகுல்காந்தி அலுத்து கொள்ள – முகத்தை துடைத்து கொண்டே வெளியேறினார் விஜய். “மரியாதை நிமித்தமான சந்திப்பு” என்றார் மீசையில் ஒட்டிய மண்ணை தட்டி விட்டவாறே.

“காவலன்” படத்திற்காக ஜெயலலிதாவிடம் ஒட்டி கொண்டவர்கள் – சட்டசபை தேர்தல் வெற்றியில் தங்களின் பங்கும் மிக பெரிய அளவு இருந்ததாக பேசி கொள்கிறார்கள். “நினைப்பு பிழைப்பை கெடுக்கட்டும். அவர்களின் அரசியல் கனவை கலைக்கட்டும்”.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . 1 Comment »