Anything for Vijay
கடந்த சில நாட்களாக SS Music தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம் தொடர்ச்சியாக வந்ததை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். விஜயை சந்திக்க இவர் என்ன செய்யப்போகிறார் என்ற வாசகத்துடன் ஒரு டப்பா விஷம், ஒரு ஹீட்டர் மற்றும் தலையை மழிக்க ஒரு கத்தி ஆகியவை காட்டப்பட்டன. அப்போதே இது ஏதோ ஏடாகூடமான நிகழ்ச்சி என்பது புரிந்தது. சந்தேகமில்லை இதைவிட மட்டமான ஒரு நிகழ்ச்சி இதுவரை வந்திருக்க முடியாது.
அந்த நிகழ்ச்சியில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரண்டு போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இருவரும் ஒவ்வொரு செயலாக செய்கிறார்கள் (மன்னிக்கவும் இதை திறமை என சொல்வதற்கில்லை). அது குறித்து நடுவராக இருக்கும் அந்த டிவி பெண் தொகுப்பாளர் கருத்து தெரிவிக்கிறார். மற்றொரு நடுவர் முகத்தை மலச்சிக்கல் வந்த மாதிரி வைத்துக்கொண்டு கருத்து இல்லை என்று சொல்கிறார். கடைசியாக முடிவு அறிவிக்க வேண்டிய நேரத்தில் அவரது கருத்து கேட்கப்பட, அவர் போட்டியாளர்களை நோக்கி கேள்விகளை எழுப்புகிறார். அந்த கேள்விகள் யாவும் அவரை சிறைவைக்கும் அளவுக்கு அநாகரீகமானவை, மன்னிக்க இயலாதவை மற்றும் மனிதத்தன்மையற்றவை.
வா போ என்கிற ஏகவசனங்கள், வெளியே போ எனும் அதட்டல்கள் (கெட் அவுட் என இருமுறை கத்துகிறார்), நீ போட்டிக்கு தகுதியில்லாதவன் எனும் நேரடி அவமானங்கள் என அவரது ஒவ்வொரு வாக்கியமும் மனித உரிமை மீறலாகவே இருந்தது. இவை முன்பே திட்டமிடப்பட்டவை என்பதில் சந்தேகமில்லை. ஒரு நிறுவனத்தில் அதன் ஊழியருக்கு இதில் எதையாவது ஒன்றை செய்தாலும் அது குற்றம். அந்த குற்றங்கள் எதுவும் நடப்பதில்லை என நாம் சொல்லவில்லை. ஆனால் அப்படியொரு செய்கை நடைபெற்றதாக செய்தி வந்தாலே அந்த நிறுவனம் அதை நாங்கள் செய்யவில்லை என மறுக்கும். ஆனால் இங்கு இப்படியான ஒரு குற்றச்செயலை பட்டவர்த்தனமாக அதுவும் நாளுக்கு நூறு விளம்பரம் போட்டு ஒளிபரப்புகிறார்களே என்பதுதான் நம் பொறுமையை சோதிப்பதாக இருக்கிறது.
இதற்குப் பிறகு ஒரு போட்டி இருந்தது. அந்த கான்ஸ்டிபேஷன் நடுவர் இருவரையும் தகுதியவற்றவர்கள் என சொல்லி இறுதிவாய்ப்பாக ஒரு ஒரு போட்டிவைக்கிறார் (இதுவரையான போட்டிகளில் நீங்கள் ஜெயிக்கவில்லை, உங்களுக்கு எதிராக போட்டியிட்டவர்கள் தோற்றுவிட்டார்கள் என அதற்கு ஒரு விளக்கம் வேறு). விஜயை சந்திக்க மூன்று வாய்ப்புக்கள் தரப்படுகிறது. ஒன்று- விஷமருந்துவது, இரண்டு- ஹீட்டரில் கைவைப்பது(அது இயங்கும்போது) , மூன்று- தலையை மழித்துக்கொள்வது. இதில் ஏதேனுமொன்றை செய்தால் நீங்கள் அவரை சந்திக்கலாம் என்றால் எதை செய்வீர்கள் என கேட்கிறார்கள். அப்பெண் விஷமருந்துவேன் என்கிறார், அந்த இளைஞன் தலையை மொட்டை அடித்துக்கொள்வேன் என்கிறார்.
நீங்கள் இதை பார்த்திருந்தால் அப்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது என சொல்லுங்கள்.. பார்க்கவில்லை எனில் இதைப் படிக்கையில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என சொல்லுங்கள். மொட்டை அடிக்க கத்தியை தலையில் வைத்தபிறகு நடுவர்கள் ஞானோபதேசம் செய்கிறார்கள், “இதை நீங்கள் விரும்பும் விஜய் விரும்புவாரா?”. பிறகு மற்றொரு நடுவர் சொல்கிறார் “உங்களது இண்டலிஜென்சை சோதிக்கவே இந்த சுற்று வைக்கப்பட்டது”. சோனியா அகிம்சையைப் பற்றி பேசியதை கேட்ட செவிகள் மன்மோகன் ஊழல் ஒழிப்பை பற்றி பேசியதை பார்த்த கண்கள் நம்முடையது, ஆகவே இந்த காட்சி ஒன்றும் நம்மை திகைக்க வைக்காது. ஆனால் இவர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள்.
விஜயை பார்க்கவேண்டும் என்பதற்காக ஒரு போட்டியில் கலந்துகொள்பவன் ஒரு முழுக்கேனையனாகத்தான் இருப்பான். ஒரு நடிகனைக் காண டான்ஸ் ஆடி ஜெயிப்பதே கேவலம், அதையே செய்தவன் மயிரை சிரைக்க மாட்டானா? அட மூதேவிகளே இண்டலிஜென்சை சோதிக்க இதுவா வழி? எனக்குகூட விஜய் முகத்தில் காறித்துப்பி அவரது இண்டலிஜென்சை சோதிக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனாலும் நாம் மனிதர்கள் என்பது நினைவுக்கு வந்து அமைதிகொள்கிறோமா இல்லையா.. டிஆர்பிக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாமா ?
விஜய்க்காக எதையும் செய்யத்துணிபவன் நிச்சயம் ஒரு மனநோயாளியாகவே இருப்பான். ஆனாலும் ஒரு மனநோயாளியின் மான அவமானங்களைப்பற்றியும் மனித உரிமையப்பற்றியும் கவலைப்படுவது நம் கடமை.
இது தொலைக்காட்சிகளில் மட்டுமில்லை பதிவுலகத்தில் கூட வினு போன்ற கோமாளிகள் விஜய் தான் உலகம் போன்றும் அவனது ஒரு சுமாரான படமான காவலன் வென்றால் அது உலக சாதனை என்றும் நினைத்துக்கொண்டு கனிமொழி படத்தில் வருவது போல கற்பனையில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்…..நண்பர்களே சிந்தியுங்கள் அந்த கோமாளி நடிகனை பார்க்க நீங்கள் விஷம் குடித்தோ உங்கள் உடலில் வாகனத்தி ஏற்றியோ என்ன பயன்….என்ன முட்டாள்தனம் இது…படம் நல்ல இருந்தால் ரசியுங்கள் அதோடு நிறுத்தி கொள்ளுங்கள்…….இப்படி ஒரு நிகழ்ச்சியை வேறு எந்த நடிகனுக்கும் வைக்காமல் விஜய்க்கு வைத்ததன் மூலம் விஜய் ரசிகர்கள் எவ்வளவு முட்டாள்கள் என்பதை உலகத்திற்கு காட்டி இருக்கிறார்கள்……
நன்றி :வில்லவன் . . .
அந்த கொடுமைகளை பாருங்கள்….