இலங்கையில் நடைபெற்ற திரைப்படவிழாவுக்கு இந்தியாவிலிருந்து யாரும் போய்க் கலந்துகொள்ளக்கூடாது என்று தென்னிந்தியத் திரைப்படக்கூட்டமைப்பு தடை விதித்ததையும் மீறிக்கலந்து கொண்ட விவேக்ஓபராய்,அசின் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்,இவர்கள் நடித்திருக்கும் படங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடாது என்கிற குரல்கள் இடைவிடாமல் கேட்டுக்கொண்டேயிருக்கின்றன.
இதுதொடர்பான வாதப்பிரதிவாதங்களின்போது நடிகர்சங்கத்தின் தலைவராக இருக்கும் சரத்குமார்,தமிழ்உணர்வின் அடிப்படையில் எழுப்பப்பட்ட இந்தக்குரல்களுக்கு எதிராகவே பேசி வந்தார்.அதற்கு, அவரும் அவருடைய மனைவி ராதிகாவும் இலங்கையில் செய்துவரும் தொழில்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதுதான் காரணமாக இருக்குமெனப் பலரும் சொன்னார்கள்.
இந்நிலையில் மிகவும் அதிர்ச்சியூட்டும் விதமாக ஒரு தகவல் தமிழ்த்திரையுலகினரின் மத்தியில் கிசுகிசுக்கப்படுகிறது.அது என்னவென்றால்,சரத்குமாரும்,இன்னொரு தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளரும் கொழும்பு சென்று ராஜபக்சேவைச் சந்தித்துவிட்டு வந்திருக்கின்றனர் என்பதுதான்.இந்தச் சந்திப்பு மிகவும் ரகசியமாகப் பேணப்பட்டுவருகிறது.
இவர்கள் எதற்காக அவரைச் சந்திக்க வேண்டும்?அங்கே பேசப்பட்ட விசயங்கள் என்ன என்பது இப்போது தெரியாவிட்டாலும்,இனிமேல் சரத்குமார் பேசுகிற பேச்சுகளைக் கூர்ந்து கவனித்தால் தெரிந்து கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். நடிகராக மட்டுமின்றி அரசியல்வாதியாகவும் இருக்கும் சரத்குமார் தமிழ் மக்களுக்கு எதிராக இப்படி அப்பட்டமாகச் செயல்படமாட்டார் என்கிற கருத்தும் நிலவுகிறது.இவற்றில் எது சரி என்பது போகப்போகத் தெரிந்துவிடும் என்கிறார்கள்.