பார்ப்பனனுக்கு பெண் கொடுக்க ஆளில்லை !!

Watch the video from 9minute

ஒரு காலத்தில் தம்மை தாமே உயர்ந்த சாதி என்று சொல்லிகொண்டிருந்த பார்ப்பனர்களை கட்டுவதற்கு இன்று அவர்களது குல பெண்களே விரும்புவதில்லை.இது தான் உண்மை நிலைமை.இன்னும் ஜாதியை தூக்கி பிடிக்கும் மூடர்கள் தமக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க கூடாது.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

நித்யானந்தாவுடனான செக்ஸின் பின்னர் ரஞ்சிதா ஊடகங்களிற்கு அளித்த முதல் பேட்டி (Video)

 

 

 

 

 

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

பணத்துக்காக மாளவிக்காவை நித்தியானந்தாவுக்கு விட்டுகொடுத்தார் கணவர் !

Photobucketகாசு கொடுத்து மாளவிகாவை நடிக்க கூட்டி வந்த நித்யானந்தா !     கிட்டத்தட்ட  80  நாட்கள், வாயையையும் கையையும்  வைத்து சும்மா இருந்த நித்தியானந்தா  அல்லது இருக்க வைக்கப்பட்ட  ‘ரஞ்சிதா’ புகழ் நித்யானந்தா,இன்றே  தனது சொற்பொழிவை ‘FREEDOM’  என்ற தலைப்பில் ஆரம்பித்துள்ளார்.

இந்த சொற்பொழிவை காண பக்தர்கள் என்ற போர்வையில் ஆயிரம் பேரை கூட்டிவர அரசியல் கட்சிகள் தோற்கும் அளவிற்கு ‘காசு’ கொடுத்து உள்ளனர்.    பொது ஜனம் மட்டும் வந்தால் போதுமா ? ஒரு கவர்ச்சி வேண்டாமா ? மாளவிகாவின்  கணவரையே  நேரில் பேசி அவரிடமே ஒரு பெரிய சன்மானத்தை கொடுத்து , மாளவிகா கூட்டத்திற்கு மட்டும் (?) வந்தால் போதும் என்று சொல்லி  அழைத்து வந்து அவரை பக்தை போல் நடிக்க வைத்துள்ளனர்.

இதை பார்த்த சிலர் , மாளவிகாவும் நடிகை என்பதால், ரஞ்சிதாவை விசாரிக்கும் முன்பு இவரையும் விசாரித்தால்  ‘சில’ உண்மைகள் தெரியும்  என்று ஒரு திரியை பற்ற வைத்துவிட்டார்கள்.       காசு வாங்கிகொண்டு அடுத்த வேலையை பார்க்கலாம் என்று நினைத்திருந்த மாளவிகா , இந்த சிக்கலில் இருந்து எப்படி மீள்வது என்று நிதியானந்தாவையே அணுகி கேட்டு வருகிறாராம்.       அப்பாடா ! எப்படியும் மாளவிகாவும் இனி நிதியானந்தாவை விட்டு வெளியில் வரமுடியாது என்று , நிதியானந்தாவிற்கு ‘சேவை’ செய்யும்  பக்தி இடைத்தரகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

PhotobucketPhotobucket

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 5 Comments »

பெண்சீடரின் தந்தையால் நித்தியானந்தாவுக்கு மீண்டும் சோதனை! வேதனையில் நித்தியானந்தா !

Photobucketசொத்துக்காக மகள்களை, என்தம்பி மூளை சலவை செய்துள்ளார் என, நித்யாணந்தா பெண்சீடர்கள் தந்தை நிரூபர்களிடம் கூறினார்.   ஆரல்வாய்மொழி அடுத்த தோவாளையை சேர்ந்தவர் சிவபாலன்.

இவர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவருக்கு கிருஷ்ணேஷ்வரி என்ற நித்திய பிரிதானந்தா (29), சித்திரேஸ்வரி என்ற நித்திய பிரம்மானந்தா (28) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் நித்தியாணந்தா ஆசிரமத்தில் நித்தியாணந்தாவின் சீடராக பணியாற்றி வந்தனர். இந்நிலையில் ஆசிரமத்தில் ஏற்பட்ட பிரச்சிணைகள் காரணமாக இவர்கள் ஆசிரமத்தை விட்டு வந்தனர்.

ஆனால் எங்களை ஆசிரமத்திற்கு செல்ல அனுமதிக்க வேண்டும். தந்தையுடன் செல்லமாட்டோம். என சமீபத்தில் சென்னை கமிஷ்ணரிடம் இவர்கள் புகார் கூறியிருந்தனர். இதுகுறித்து தோவாளையில் உள்ள சகோதரிகளின் தந்தை சிவபாலன் நிருபர்களிடம் கூறியதாவது, எனக்கு கிருஷ்ணேஷ்வரி, சித்திரேஷ்வரி என்ற இரண்டு மகள்கள் உண்டு. எனது தம்பி கண்ணன்.

இவர் அரசு ஊழியராக சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இவர் நித்தியாணந்தாவின் சீடராக உள்ளார். இதனால் அவரது பெயரை விஷ்வரூபாணந்தா என மாற்றம் செய்துள்ளார். எனது மகள்களையும் வெளிநாட்டில் ஆசிரமம் வைத்து தருகிறேன் என அழைத்து சென்று ஆசிரமத்தில் விட்டு விட்டார். கண்ணன் என்னிடம் 5 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார்.

அதை திருப்பி கேட்டபோது திருப்பி தராமல் மேலும் 10 லட்சம் தரவேண்டும் என மிரட்டுகிறார். எனது மகள்களை மூளை சலைவை செய்து மறுபடியும் ஆசிரமத்திற்கு அழைத்து செல்ல முடிவு செய்துள்ளார் என்று கண்ணீர் மல்க கூறினார். மேலும் எனது மகள்களை மூளை சலவை செய்ததாலே அவர்கள் பொய் புகார் கூறியுள்ளனர்.

இரண்டு ஆண்டுகள் எனது குழந்தைகளை பார்க்க முடியாமல் செய்துள்ளனர். எனது சொத்து, பணம் எல்லாவற்றையும் அபகரிக்கவே இதுபோல கண்ணன் செய்து வருகிறார். எனக்கு தரவேண்டிய பணத்தை சட்டப்படி வக்கீல் மூலம் கோர்ட்டில் சந்தித்து பெருவேன் என்றார் வேதனையுடன்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

நித்யானந்தா: பெண்கள் சிறையில் அடைப்பு!

நான் ஆண் அல்ல என்று தன்னை விசாரித்து வரும் கர்நாடக சிஐடி போலீசாரிடம் நித்யானந்தா வாக்குமூலம் அளித்து அதிர்ச்சி தந்துள்ளார்.
கடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்ட நித்தியானந்தாவை போலீஸ் காவலில் எடுத்து கர்நாடக சிஐடி போலீசார் விசாரித்து வந்தனர் Read: In English

இந் நிலையில் இன்றுடன் நித்தியானந்தாவின் காவல் முடிவடைந்தது. இதையடுத்து அவரை ராம்நகர் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.

பெண்கள் சிறையில் நித்யானந்தா அடைப்பு:
அவரை மே 12ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதின்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ராமநகர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட நித்யானந்தா அங்கு பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் பெண் கைதிகள் இல்லாததால் அவரை அங்கு அடைத்தனர்.

நான் ஆண் அல்ல..:

முன்னதாக போலீசாரிடம் வாக்குமூலம் தந்த நித்யானந்தா, நான் ஆணே அல்ல என்றும், இதனால் நான் எப்படி யாரையும் கற்பழிக்க முடியும் என்று கேட்டு கூறி அதிர்ச்சி தந்தார்.
இதையடுத்து அவர் ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறியும் பாலினச் சோதனை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
ஆனால், அவரது பாஸ்போர்ட்டில் அவர் ஆண் கூறியுள்ளதையும், அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனைகளிலும் அவர் ஆண் என்று கூறப்பட்டுள்ளதாலும் ஆண்மை பரிசோதனை நடத்தும் முடிவை போலீசார் கைவிட்டுவிட்டனர்.
இதற்கிடையே, தனக்கு ஜாமீன் கோரி ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தல் நித்தியானந்தா தாக்கல் மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது.
போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க தொடர்ந்து நித்தியானந்தா மறுத்து வருவதால், ஜாமீன் வழக்குவதற்கு அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நித்தியானந்தாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை மே மாதம் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஆசிரமத்தில் சந்தனக் கட்டைகளை வைத்திருந்ததாக தாக்கலான வழக்கில் அவருக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் தந்துள்ளது.
இதற்கிடையே, ஆசிரமத்தின் சொத்து விபரங்கள் தொடர்பான சில தகவல்களை நித்தியானந்தா கூறியதாக கர்நாடக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கர்நாடக போலீசின் தணிக்கை பிரிவைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழு நித்தியானந்தா ஆசிரமத்தின் சொத்து விவரங்கள் தொடர்பாக விசாரணையை நடத்தி வருகிறது.
நித்தியானந்தா ஆசிரமத்தின் பெயரில் 10 வங்கிகளில் ரூ. 35 கோடி பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் நித்தியானந்தா ஆசிரமத்தின் கடந்த 8 ஆண்டுகால வரவு செலவுகளையும் தணிக்கை குழு ஆராய்ந்து வருகிறது. இதில் நித்தியானந்தா உல்லாசமாக இருக்க மட்டும் ஒரு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் செலவழித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சி.டியில் இருப்பது நித்யானந்தா தான்-ஆய்வுக்கூடம்:
இதற்கிடையே நித்யானந்தாவிடம் விசாரணை நடத்தி வரும் பெங்களூர் சி.ஐ.டி. போலீசார் சமீபத்தில் பிடுதி ஆசிரமத்தில் இருந்து 36 வீடியோ காட்சிகளை பறிமுதல் செய்திருந்தனர்.
அதில் 5 பெண்களுடன் நித்யானந்தா செக்ஸ் லீலைகளில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. ஆனால், விசாரணையின்போது, ரஞ்சிதா மற்றும் இந்த சிடிக்களில் இருப்பது நான் இல்லை நித்யானந்தா கூறினார்.
இதையடுத்து இந்த சி.டிக்கள் ஹைதராபாத்தில் உள்ள தடயவியல் ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கடந்த 4 நாட்களாக அங்கு நடத்தப்பட்ட சோதனையின் அறிக்கை இன்று பெங்களூர் போலீசார் கைக்கு வந்து சேர்ந்தது.
அதில், 35 வீடியோ காட்சிகளிலும் இருப்பது நித்யானந்தா தான் என்று உறுதிப்படுத்தப்பட்டது. ரஞ்சிதாவுடன் இருப்பது போன்ற காட்சியில் தோன்றுவதும் நித்யானந்தா என்று ஆய்வகம் கூறப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »