கோ – விமர்சனம்


ஜனநாயகத்தின் நான்காவது து£ணுக்கு கமர்ஷியல் பெயிண்ட் அடித்திருக்கிறார் கே.வி.ஆனந்த். அது கலர்ஃபுல் கலக்கலாக இருப்பதால் இனி அவரை ‘கோ’.வி.ஆனந்த் என்றே கூட அழைக்கலாம்!

தின அஞ்சல் புகைப்படக்காரர் ஜீவா, தான் எடுக்கும் அதிரடி புகைப்படங்களால் நாட்டில் ஏற்படுத்தும் புரட்சிதான் கதை. அந்த புரட்சியால் நாட்டையே பிடிக்கும் அஜ்மல் நல்லவரா, கெட்டவரா? பத்திரிகையாளர்களுக்கு இந்த சமூகத்தின் மீது இருக்கிற அக்கறையும் கடமையும் என்ன? என்பதையெல்லாம் இதைவிட நுணுக்கமாகவும், வியாபார ரீதியாகவும் சொல்வதற்கு இன்னொருவர் வர வேண்டும். ஆனால் அவரும் கே.வி.ஆனந்தாகதான் இருப்பார்! தெளிக்கப்படும் ‘இங்க்’ போல தேவையில்லாத பல காட்சிகளை தானாகவே எரேஸ் செய்துவிடுகிறது மைண்ட்!

ஜீவாவின் முதல் காட்சியே அதிரடி அமர்க்களம். ஒரு பத்திரிகையாளனுக்கு எல்லாமே செய்தியாக தெரிய வேண்டும் என்பதை வெளிப்படுத்துகிற அந்த முதல் காட்சியில் தொடங்கி, நாட்டையே உலுக்கும் ஒரு பரபரப்பான சம்பவத்தை படமாக்கி நெட் வழியே அனுப்பும் கடைசி காட்சி வரை ஜீவாவின் ஐம்புலன்களும் நடித்திருக்கிறது. நாட்டில் திரியும் முரட்டு சிங்கங்களையெல்லாம் கோபப்படுத்தும் இவர் அலுவலகத்திற்குள் சாதாரணமாக அரட்டையடித்துக் கொண்டிருப்பது அழகு. பத்திரிகையாளர்களின் இயல்பு வாழ்க்கையை கன ஜோராக வெளிப்படுத்தியிருக்கிறார் ஜீவா.

பப்ளிஷரால் அவமானப்படுத்தப்படும் சக நிரூபி கார்த்திகாவுக்கு ஆதரவாக களம் இறங்கும் ஜீவா, எதிர்கட்சி தலைவரின் பால்ய விவாகத்தை படம் பிடிக்கிற அனுபவம் த்ரில்லிங்கானது. இடையிடையே வந்து ஜீவாவை அவஸ்தைப்படுத்தும் அந்த கழுதை கூட நமது பிராணனை சூடேற்றுகிறது!

தைரியசாலி நிருபராம் கார்த்திகா. கதையில் விடுங்கள். பாடல் காட்சிகளில் மலையுச்சி ஓரத்திலும், தொங்கு பாறை இடுக்கிலும் நின்று, படுத்து காதல் செய்யும் போது இவர் காட்டுகிற தைரியத்தைதான் தனியாக மெச்ச வேண்டும். சற்றே ஆண்மை கலந்த அழகு! அதுவே எலும்பு நொறுங்க பரவசப்படுத்துகிறது ரசிகர்களை.

சரக்கடித்த எலிபோல சைய் முய் என்று கத்திக் கொண்டு பியா பண்ணும் அமர்க்களங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் கை பணத்தை செலவு பண்ணி ரசிக்கலாம். அவரது முடிவு கலங்க வைப்பதும் நிஜம். ஆனால் ஒரு பத்திரிகையாளரின் டிரஸ் கோட், பியாவால் அபாயகரமான அளவுக்கு மீறப்பட்டிருப்பதுதான் அநியாயம்!

அஜ்மல்… ஹ்ம்ம்ம். தமிழ்சினிமாவின் கேட்வாக் கதாநாயகன் அஜீத் என்றால், கிட்டதட்ட அதே அளவுக்கு ‘வாக்’குகிறார் இவரும். இந்தியாவின் யங் சிஎம் என்ற திடீர் அந்தஸ்து ரசிகர்களின் மனதில் தைக்க நெடுநேரம் பிடிக்கிறது. அதற்குள் முடிந்துவிடுகிறது எல்லாமே!

இந்த படத்திற்கு ஏன் பிரகாஷ்ராஜ் என்ற கேள்வி ஏனோ வீட்டுக்கு வந்த பின்பும் தொடர்வது துரதிருஷ்டம். மற்றொரு கட்சி தலைவரான கோட்டா சீனிவாசராவ் வழக்கம் போல அமர்க்களம். தமிழ் பத்திரிகைதானடா இது. அப்புறம் எதுக்கு இங்கிலீஷ்? என்கிற அவரது கேள்வி சிரிப்போடு செருகப்பட்ட சதக்!

சீட்டோடு இறுக்கி முடிச்சு போடுகிறது ரிச்சர் எம்.நாதனின் கேமிரா என்றால், கவனத்தை சிதற விடாத ‘லாக்’ ஹாரிசின் இசை! லொகேஷனும் இசையும் நடன இயக்கமும் இணைந்து நடத்தியிருக்கிற மந்திர ஆட்டத்துக்கு மதி மயங்கி போகிறது தியேட்டர் மொத்தமும்!

Rating – 4.5 / 5

Onelanka விமர்சன குழு

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

கோ மெகா வெற்றி……

இது ஒரு விமர்சனம் கிடையாது……கோ படம் அனைவரும்ன் பார்க்கவேண்டிய தமிழ்சினிமாவின் மாறுபட்ட முயற்சி…..எந்திரன்
படத்தின் மூலம் சங்கரின் திறமையில் வீழ்ச்சி ஏற்ப்பட்டுள்ள அதே நேரம் அந்த இடத்தை நிச்சயமாக நிரப்ப தகுதியானவர் K.V.ஆனந்த் தான் என்பதை தனது கோ மற்றும் அயன் படங்கள் மூலம் நிரூபித்துள்ளார்.தமிழ்சினிமாவின் வழமையான குத்துப்பாட்டு செண்டிமெண்ட் கோவில் திருவிழா படமல்ல இது……..தமிழ்நாட்டு இன்றைய நிலையை எடுத்துக்காட்டும் சிறந்த அரசியல் திரைப்படம்.இது போன்ற நல்ல படங்களை தியேட்டரில் பார்த்து ஊக்கமளிக்கவும்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 1 Comment »

வெளிவந்துவிட்டது TR கொடுமை பாகம் 5…….

கேளுங்கள் கொல்லப்படும் நிகழ்ச்சியில் இருந்து TR அவர்கள் சிவமணி எப்படி Drum வாசிப்பார் என்பதை தனது கை கடிகாரத்தை வைத்து செய்து காட்டயுள்ளார்…..இந்த அருமையான வீடியோவை காண தவறாதீர்கள்…

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 1 Comment »

சட்டப்படி குற்றம்!! மொக்கை படம்…..(விமர்சனம்)

Kullanari Koottam

அரத பழசான தனது லாயர் கோட்டுக்கு மீண்டும் ஒரு முறை சோப்பு போட்டிருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். அப்படியே பிஸ்டலையும் து£க்கிக் கொண்டு கிளம்பியிருக்கிறார். அதைக் கொண்டு கான்டா மிருகங்களுக்கு குறி வைத்திருக்கிறார் என்று நினைத்தால், கரப்பான் பூச்சிகளை சுட்டுத் தள்ளியிருக்கிறார்!

து£க்கு தண்டனை கைதியான விக்ராந்த்தை ஜெயில் சுவற்றை மோதி உடைத்துக் ஜீப்பில் காப்பாற்றிக் கொண்டு போகிறார் காட்டில் புரட்சிப்படை நடத்தி வரும் சத்யராஜ். (ஜீப்பின் முன் பக்கம் நெளிய வேண்டாம். அட்லீஸ்ட் ஹெட் லைட்டுகளுக்காவது சேதம் வருமல்லவா, அது கூட இல்லை. இப்ப புரிஞ்சுருக்குமே இந்த படத்திற்கும் லாஜிக்குக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா என்று) அங்கே இவரைப் போலவே ஏராளமான இளைஞர்கள், இளைஞிகள். எல்லாருமே சமுகத்தின் ஏதாவதொரு பெருச்சாளியால் கடிபட்டவர்கள். சீனுக்கு சீன் பெரிய சுருட்டை பற்ற வைத்துக் கொண்டு அவர்களுக்கு கிளாஸ் எடுக்கிறார் சத்யராஜ்.

நாட்டுக்குள்ளிருந்து நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களை காட்டுக்குள் கடத்திக் கொண்டு போகும் புரட்சிப்படை கும்பலும் தலைவர் சத்யராஜும், ஏன் தவறுக்கு துணை போறீங்க என்று அவர்களை கேட்பதுடன், நாங்க கேக்கறது தப்புன்னா எங்களை சுட்டு தள்ளிட்டு நீங்க தப்பிச்சு போகலாம் என்று துப்பாக்கியை அவர்கள் வசமே ஒப்படைக்கிறார்கள். அப்புறம் என்ன? நாட்டுக்கு திரும்பி வரும் ‘நல்லவர்கள்’ நீதி தவறாமல் முடிவெடுக்கிறார்கள். அரசியல்வாதிகளிடமிருந்து கருப்பு பணம் கைப்பற்றப்படுகிறது. ரவுடிகள் சுட்டுத் தள்ளப்படுகிறார்கள். இறுதியில் எல்லாம் சுபமஸ்து! கருப்பு பணம் மக்களுக்கே திரும்பி வருகிறது, அதுவும் அவரவர் வீடு தேடி!

கொடுத்த வேலையை கெடுக்காமல் செய்திருக்கிறார் சத்யராஜ். அதற்காக ‘பத்து பேர் பலியானான், நு£று பேர் புலியானான்’ என்ற கம்பீர வார்த்தைகளை சம்பந்தமில்லாமல் இந்த படத்தில் வைத்து… (என்னவோ போங்க சார்) இவருடன் விக்ராந்த், ஹரிஸ் கல்யாண், வசந்த், தாமிரபரணி பானு, சுரேஷ், லிவிங்ஸ்டன், ராதாரவி போன்ற பெரும் நட்சத்திர கூட்டமே நடித்திருக்கிறது. விரிவாக பேசுவதற்கு அவசியமில்லை. சீமானின் வசனங்களில் மட்டும் அப்படியே அப்பட்டமான ஸ்பெக்ட்ரம் வாசனை. அதுவும் அந்த முன்னாள் மினிஸ்டரை நேரடியாகவே தாக்கி துவம்சமாக்கியிருக்கிறார் எஸ்.ஏ.சி.

காட்டுக்குள்ளிருக்கும் புரட்சி போராளிகள், நாட்டுக்குள் வந்து அதிகாரிகள் நேர்மையாக பணிசெய்ய துணை நிற்கும் காட்சிகள் மட்டும் புதுசு. அதற்காக ஒருமுறை வஞ்சகமில்லாமல் பாராட்டலாம் இயக்குனரை. திட்டுகிற வரைக்கும் திட்டி தீர்த்துவிட்டு பெரியவர் நல்லவர்தான். அவரு பேரை ஏன்யா கெடுக்கிறீங்க என்பது மாதிரி ‘ஜர்க்’ அடித்திருப்பதுதான் பல்டி நம்பர் ஒன்!

விஜய் ஆன்ட்டனி இந்த படத்திற்கு சம்பளம் வாங்கவில்லை என்று சொல்லியிருந்தார் எஸ்.ஏ.சி. சொல்லவே வேண்டாம். புரிகிறது. அவரையும் மீறி ரசிக்க வைத்திருக்கிறது ராத்திரி நேரத்து பூஜையில் ரிமிக்ஸ். அவருக்கு திருக்குறளை பிடிக்கும். ஏன்னா அதிலே அதிகாரம் இருக்கே. வசன உபயம் வி.பிரபாகர். பொறி பறக்குது பாஸ்…

இஷ்டப்படி படம் எடுப்பது மட்டும் என்னவாம் சார்?

Daily News இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »