ஆந்திர கவர்னராக இருக்கும் 86 வயதுக்காரர் என்.டி.திவாரி 4 இளம் பெண்களுடன் படுக்கை அறையில்…”- இப்படி ஒரு காட்சி ஏ.பி.என். ஆந்திரஜோதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான போது பலர் அதிர்ந்து போனார்கள். “இந்த வயதிலா அவர் இப்படி…?” என்று சந்தேக கேள்வி எழுப்புகிறவர்களுக்கு “சின்ன வயதில் இருந்தே இவர் இப்படித் தான்…” என்கிறது அவரது கடந்த கால வாழ்க்கை. ஆரம்பத்தில் நாடு சுதந்திரம் பெற வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்த திவாரி 17-வது வயதிலேயே சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போதே பெண்கள் மீது ஒரு கண் அவருக்கு இருந்தது. பெண்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்து வதில் தனி ஆர்வம் கொண்டிருந்தார். 1963-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அதன் பிறகு ஒரு பத்திரிகையில் செய்தியாளராக இருந்தார். இந்த கால கட்டத்திலும் அவரது “பெண்” ஆர்வம் வளர்ந்து கொண்டே இருந்தது. 1965-ம் வருடம் இளைஞர் காங்கிரசின் முக்கிய தலைவராக இருந்தார். அப்போது இளம் பெண்களுடன் அதிக நட்புடன் பழகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. படிப்படியாக அவர் அரசியல் தலைவராக வளர்ந்தார். இதன் மூலம் உத்திரப்பிரதேச முதல்-மந்திரி ஆனார். இந்த கால கட்டத்தில் அவருக்கு இருந்த செல்வாக்கு, தனிப்பட்ட பாதுகாப்பு, யாரையும் சந்திக்கும் வசதி ஆகியவை விரும்பிய பெண்களை அடையும் உச்ச கட்ட லீலைகளுக்கு வழி வகுத்தது. இதை நன்றாக பயன் படுத்திக்கொண்ட திவாரி, பணத்தால் மடங்கும் அரசியல் வாதி என்ற நிலையில் இருந்து விடுபட்டு, இளம் பெண்ணின் சுகத்தால் மயங்கும் சுகவாசி என்ற பெயரைப் பெற்றார். எதற்கும் துணிந்த இளம் பெண்களை அனுப்பி அந்த மாநில முக்கிய பிரமுகர்கள் பண முதலைகளாக மாறிக் கொண்டிருந்தனர். உத்தரபிரதேசத்தில் இருந்து பிரிந்த உத்தரகாண்ட் மாநிலத்துக்கு திவாரி முதல் -மந்திரி ஆனார். அப்போது சரிகா பிரதான் என்ற 23 வயது பெண்ணை தனது ஆசை நாயகியாக ஆக்கிக் கொண்டார். நேபாளத்தை சேர்ந்த அந்த இளம் பெண்ணுக்கு தனது மந்திரி சபை மந்திரிகளுக்கு இருக்கும் அந்தஸ்தை கொடுத்து இருந்தார். ஒரு முறை தனது எதிரில் “வந்தே மாதரம்” பாடிய பெண்ணின் அழகில் பரவசம் அடைந்து அவரை படுக்கை அறைவரை அழைத்துச் சென்ற சம்பவமும் இப்போது வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே திவாரியின் பல்வேறு மோக லீலைகள் “நல்சாமி நாராயன்” என்ற பெயரில் சி.டி.யாக வந்து அதை வெளியிட்ட கவிஞர் நரேந்திர சிங் ஜேகி என்பவரை கோடீஸ்வரர் ஆக்கி இருப்பதும் பழைய கதை.
என்.டி.திவாரிக்கும் திருமணம் நடந்தது. மனைவி பெயர் சுசிலா சர்மா. 1984-ல் இவர் புற்று நோய் சிகிச்சைக்காக அமெரிக்க ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அப்போது அங்குள்ள நர்சுகளிடமும் “அந்த” ஆசையுடன் நெருங்கி “சூடு” பட்டிருக்கிறார்.
திவாரி “செட்டப்” செய்து வைத்திருந்த ஒரு பெண்ணை, அவரது மனைவி சுசிலா கண்டு பிடித்து அடித்து உதைத்தார். அந்த பெண்ணுக்கு பிறந்த வர் தான் சமீபத்தில், “என்.டி. திவாரி என் தந்தை” என்று கோர்ட்டுக்குப்போனார். அந்த வழக்கு தற்போது நிலு வையில் உள்ளது. ஏற்கனவே ஒரு பெண்ணுடன் ரகசிய தொடர்பு வைத்திருந்த நிலையில் வேறுஒரு பெண்ணையும் மடக்கி ஒதுங்கிய போது, முதலில் தொடர்பு வைத்திருந்த பெண் அந்த இடத்துக்கே சென்று திவாரியை பின்னி பிணைத்யெடுத்ததில் அவரது முகம் கைகால் வீங்கிப் போனதும் அவரது “மோக” வாழ்க்கை சரித்திரத்தின் முக்கிய அத்தியாயம் ஆகும்.
நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது அவரிடம் என்.டி.திவாரி அடிக்கடி மோதிக் கொள்வார். இந்த நிலையில் ஒருநாள் காணாமல் போன திவாரியை பிரதமர் நரசிம்மராவ் ஆள் வைத்து கடத்திச் சென்று விட்டார் என்று பரபரப்பாக பேசப்பட்டது.
இது நரசிம்மராவ் கவனத்துக்கும் போனது. எப்போதும் சிரிக்காத அவர் இதைக் கேட்டதும் லேசாக புன்னகைத்தப்படி, “இவர் எங்கேயும் போயிருக்க மாட்டார் டெல்லியில் இருந்து உ.பி. செல்லும் வழியில் கஜ்வாலா என்ற இடத்தில் பிர்லாவுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகை இருக்கிறது. அங்கு போய் பார்த்தால் உண்மை தெரியும்” என்றார். உடனே அங்கு சென்றவர்கள் திவாரி பெண்களுடன் தீராத விளையாட்டில் ஈடுபட்டிருந்ததை கண்டு நமட்டுச் சிரிப்பு சிரித்தார்கள்.
பதவி இருந்தாலும் இல்லா விட்டாலும் மனைவி இருந்த போதும் மறைந்த பிறகும் திவாரி பெண்கள் தொடர்வை விட்டதே இல்லை. அது ஆந்திர கவர்னரான பிறகும் தொடர்ந்தது. அதுவும் 86 வயதை கடந்து உடல் தளர்ந்த காலத்திலும் மோக உணர்வு மட்டும் குறையவே இல்லை.
திவாரி முதல்-மந்திரியாக இருந்த போது பெண்களை காட்டி காரியம் சாதித்தவர்கள், அவர் ஆந்திர கவர்னர் ஆன பிறகும் அதே “யுத்தியை” பயன்படுத்தி காரியங்களை சாதிக்கத் தொடங்கினார்கள். கவர்னர் சிபாரிசு செய்கிறார். அவர் நீண்ட கால காங்கிரஸ்காரர் முக்கிய தலைவர் என்பதால் அதற்கு ஆந்திர அரசில் மரியாதை இருந்தது.
இதை பெண் புரோக்கர் ராதிகா சரியாக பயன்படுத்திக் கொண்டார். ஆந்திராவில் சுரங்கத் தொழில் செய்யும் சில கோடீஸ்வரர்கள் பின்னணியில் இந்த “ராஜலீலை” காட்சிகள் அறங்கேறி இருக்கின்றன.
கிழட்டு சிங்கத்தின் விருப்பப்படி 16-25 வயது இளமான்கள் விருந்தாக படைக்கப்பட்டது போல பரவசம் அடைந்த திவாரியும் சினிமா பாணியில் ராதிகா காட்டிய கோரிக்கை மனுக் களுக்கு எல்லாம் சிபாரிசு செய்து கையெழுத்து போட்டிருக்கிறார்.
ஆரம்பத்தில் “மசாஜ்” செய்வதற்காக கவர்னர் மாளிகைக்கு வந்த ஒரு சில இளம் பெண்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகமாகி இருக்கிறது. பின்னர் பல பெண்கள் கவர்னரின் விருந்தினராக அங்கேயே நிரந்தரமாக தங்கி விட்டனர்.
இதை பயன்படுத்தி அங்கு வேலை பார்த்த பல அதிகாரிகளும் இதே வழி முறையில் இறங்கி இருக்கிறார்கள். பெண் ஊழியர்கள் சிலரும் அதிகாரிகளின் விருப்பப்படி நடந்து கொள்ளும் நிலை உருவாகி இருக்கிறது. ஆந்திர கவர்னர் மாளிகையில் தங்கிய மத்திய மந்திரிகள் உள்ளிட்ட சிலரும் இந்த “பெண்” வலையில் சிக்கி தப்பி இருக்கிறார்கள்.
இது பற்றிய தகவல் மாநில அரசுக்கு தெரியவந்த போது, பழைய கதைகளையும் கிளறினார்கள். எனவே, கவர்னர் திவாரியின் சிபாரிசுகளை ஏற்பது இல்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது. இதனால் பெண்களைக் காட்டி திவாரியிடம் பெற்ற கையெழுத்துக்கு மதிப்பும், மதியாதையும் குறைந்தது. எந்த காரியமும் நடக்க வில்லை.
சிபாரிசுகளுக்கு மரியாதை இருக்கும் போது, விதம் விதமாக பெண்களை அனுப்பி வைத்த ராதிகாவுக்கு, தனது அன்பு பரிசாக திவாரி ஒரு விலை உயர்ந்த செல்போனை கொடுத்தார்.
சிபாரிசு எடுபடாமல் போன போது, ஆத்திரம் அடைந்த ராதிகா, 86 வயது திவாரியின் “மோக” விளையாட்டை செல்போனில் படமாக எடுத்து அவருக்கு பாடம் கற்பித்து விட்டார்.