நடிகை சீதா 2-வது திருமணம் வீட்டில் ரகசியமாக நடந்தது – டி.வி.நடிகரை மணந்தார்!!

Photobucket`ஆண்பாவம்’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், சீதா. தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் பல படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

பார்த்திபன் கதாநாயகனாக நடித்து முதன்முதலாக டைரக்டு செய்த `புதிய பாதை’ படத்தில், சீதா கதாநாயகியாக நடித்தார். அப்போது சீதாவுக்கும், பார்த்திபனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்த காதலுக்கு சீதா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

அதனால் சீதா வீட்டைவிட்டு வெளியேறினார். சீதாவும், பார்த்திபனும் ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள். 20 வருடங்களுக்கு முன்பு இந்த திருமணம் நடைபெற்றது. சீதா-பார்த்திபன் தம்பதிக்கு அபிநயா, கீர்த்தனா என்ற இரண்டு மகள்களும், ராதாகிருஷ்ணன் என்ற வளர்ப்பு மகனும் இருக்கிறார்கள். திருமணம் ஆகி குழந்தைகள் பிறந்த சில வருடங்களிலேயே சீதாவுக்கும், பார்த்திபனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இருவரும் குடும்ப நல கோர்ட்டு மூலம் விவாகரத்து செய்து கொண்டார்கள். விவாகரத்துக்குப்பின், சீதா பெற்றோர்களுடன் வாழ்ந்தார். அவருடன் மூத்த மகள் அபிநயா மட்டும் இருக்கிறார். இளைய மகள் கீர்த்தனாவும், வளர்ப்பு மகன் ராதாகிருஷ்ணனும் பார்த்திபனிடம் இருக்கிறார்கள். கதாநாயகி வாய்ப்பு போன பின் சீதா டி.வி. தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். திரைப்படங்களில் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சீதாவுக்கும், டி.வி. நடிகர் சதீசுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகினார்கள். கணவன்- மனைவி போல் ஒரே வீட்டில் வசித்து வந்த அவர்கள், முறைப்படி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார்கள்.

அதன்படி சீதாவும், சதீசும் ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள். சென்னை சாலிகிராமத்தில் உள்ள சீதா வீட்டில், அவருடைய பெற்றோர்கள் முன்னிலையில் இந்த திருமணம் நடந்தது. இரண்டாவது திருமணம் செய்து கொண்டது பற்றி நடிகை சீதா, `தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:- “எனக்கு ஒரு துணை வேண்டும் என்பதற்காகவே இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன். சதீஷ் என் வாழ்க்கையில் வந்தது பற்றி சந்தோஷப்படுகிறேன்.

அவரையே திருமணம் செய்து கொண்டதை பெருமையாக கருதுகிறேன். வயதான காலத்தில் ஒரு பெண், ஆண் துணை இல்லாமல் வாழ முடியாது. அதற்காகவே சதீசை திருமணம் செய்து கொண்டேன். எனக்கு ஏற்கனவே இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்வதில் உடன்பாடு இல்லை.” இவ்வாறு சீதா கூறினார்.
Photobucket

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 4 Comments »

120 பெண்களுடன் உறவு கொண்டேன்- டைகர் உட்ஸ் பகீர் தகவல்

Photobucket

கடந்த ஐந்து வருடத்தில், 120 பெண்களுடன் கள்ள உறவு வைத்திருந்ததாக கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் உட்ஸுக்கும், அவரது மனைவி எலின் நார்டெக்ரனுக்கும் இடையிலான திருமண உறவு முறிவது உறுதியாகி விட்டது. தான் உறவு வைத்திருந்த பெண்கள் விவரத்தையும், எத்தனை பேருடன் உறவு கொண்டேன் என்பதையும் தனது மனைவியிடம் தெளிவாக கூறி விட்டாராம் உட்ஸ். மிஸிஸிபியில் உள்ள செக்ஸ் சிகிச்சை மையத்தில் வைத்து தனது மனைவியிடம் இந்தப் பட்டியலைக் கொடுத்தாராம் உட்ஸ்.

இதையடுத்து உட்ஸுடனான திருமண உறவை முறித்துக் கொள்ளும் முடிவுக்கு தீர்மானமாக வந்துள்ளாராம் எலின்.

இந்த நிலையில் தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் 22 வயதான ரேய்ச்சல் கோட்ரியாட் என்ற பெண்ணுடனும் உட்ஸ் உறவு வைத்துக் கொண்டது தெரியவந்துள்ளது. இதை அந்தப் பெண்ணே வெளிப்படையாக கூறியுள்ளார்.

தனக்கு 21 வயதாக இருந்தபோது உட்ஸ் தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டார் என்று கூறியுள்ளார் ரேய்ச்சல்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!!

காதல் கொண்டேன் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி 7ஜி ரெயின்போ காலனி, திருட்டுப்பயலே உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை சோனியா அகர்வால்.

டைரக்டர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட சோனியா, திருமணத்துக்கு பின்னர் சினிமாவில் நடிப்பதை தவிர்த்தார். முழுக்க முழுக்க குடும்பத் தலைவியாக இருந்து வந்த சோனியா – செல்வராகவன் தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படத்தை இயக்கியபோது நடிகை ஆண்ட்ரியாவுடன் நெருங்கிப் பழகியதாகவும், இது சோனியா அகர்வாலுக்கு பிடிக்காததால் தம்பதியரிடையே சண்டை ஏற்பட்டதாகவும் செய்திகள் கசிந்தன. அதனைத்தொடர்ந்து இருவரும் பரஸ்பர விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு குடும்ப நல கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சோனியா – செல்வராகவன் தம்பதிக்கு விவாகரத்து வழங்கி கோர்ட் உத்தரவிட்டது.

‌விரும்பி கேட்ட விவாகரத்து கிடைத்ததை தொடர்ந்து செல்வராகனும், சோனியா அகர்வாலும் தனித்தனி காரில் உற்சாகமாக கோர்ட்டில் இருந்து புறப்பட்டு சென்றனர். கோர்ட்டில் இருந்து வெளியே வந்த இருவருமே பத்திரிகையாளர்களிடம் எதுவும் பேசவில்லை.

சமீபகாலமாக செல்வராகவனை விட்டு பிரிந்து வாழ்ந்த சோனியா அகர்வால், மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வேட்டையில் இறங்கியிருக்கிறார். பொது நிகழ்ச்சிகளுக்கு கவர்ச்சியான உடைகளை அணிந்து வந்து போஸ் கொடுப்பதில் தொடங்கி, விதவிதமான கெட்-அப்களில் எடுக்கப்பட்ட ஸ்டில்களையும் கோலிவுட், மல்லுவுட், டோலிவுட்களில் உலவ விட்டார். அதற்கு கைமேல் பலன்களும் வந்து குவியத் தொடங்கி விட்டதாக தகவல்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

80 வயதுக் கணவரிடமிருந்து டைவர்ஸ் கேட்கும் 12 வயது சவூதி சிறுமி

சவூதி அரேபியாவைச் சேர்ந்த 12 வயது சிறுமி, தனது 80 வயது கணவருக்கு எதிராக விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார். சவூதி அரேபியாவில் சிறார் திருமணங்கள் படு சகஜம். சிறு வயதுப் பெண்களை வயதானவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பதும் அங்கு அதிக அளவில் உள்ளது. இதுகுறித்து சர்ச்சைகள் எழுந்தாலும் அரசு இதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. இந்த நிலையில் 80 வயது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி மனு செய்துள்ளார் 12 வயது சிறுமி. இந்த சிறுமியின் வழக்குக்குத் தேவையான சட்ட உதவிகளை அரசு செய்யவுள்ளது. அரசின் மனித உரிமை ஆணையம், சிறுமிக்கு ஆஜராவதற்காக ஒரு வக்கீலை அமர்த்தியுள்ளது. புரைதா கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. சவூதியைப் பொருத்தவதை இத்தனை வயதில்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று சட்டப்பூர்வமாக எதுவும் இல்லை. இதன் காரணமாக ஏழைகள், பழங்குடியினர் தங்களது பெண் பிள்ளைகளை வயதுக்கு வந்தததுமே பெரும் பணக்காரர்களுக்கு கல்யாணம் செய்து கொடுத்து விடுகிறார்கள். இது அங்கு சாதாரண விஷயம்தான். ஆனால் ஒரு சிறுமி விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறியுள்ளது இதுவே முதல் முறையாகும் என்பதால் பரபரப்பாகியுள்ளது. இதற்கிடையே சிறார் திருமணங்களைத் தடுக்க அரசு விழித்துக் கொண்டு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதுதொடர்பான சட்ட மசோதாவை அது தயாரித்து வருகிறது. விவாகரத்து கோரி மனு செய்துள்ள 12 வயது சிறுமி, அவரது தந்தையின் உறவினருக்கு கடந்த ஆண்டு கட்டிக் கொடுக்கப்பட்டார். இதற்காக வரதட்சணையாக சிறுமிக்கு 85 ஆயிரம் ரியால்கள் கொடுக்கப்பட்டது.

இந்தத் திருமணத்தை எதிர்த்தும், தனது மகளுக்கு விவாகரத்து அளிக்கும்படியும் கோரி சிறுமியின் தாயார் மனு செய்தார். பின்னர் காரணம் கூறாமல் இநத மாதத் தொடக்கத்தில் மனுவை அவர் திரும்பப் பெற்றார்.

இருப்பினும் தற்போது அந்தச் சிறுமி விவாகரத்து கோரியுள்ளார்.

இதுகுறித்து மனித உரிமை ஆணைய வழக்கறிஞர் அலனாட் அல் ஹெஜைலான் கூறுகையில், எங்களது முக்கியக் கவலையே, அந்தச் சிறுமியின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான். அது கோர்ட்டின் கையில் உள்ளது. இருப்பினும் சிறுமிக்கு ஆதரவாக நாங்கள் நிற்கப் போகிறோம் என்றார்.

இன்னும் சில நாட்களில் இந்த வழக்கில் தீர்ப்பளிக்கவுள்ளது கோர்ட்.

ஒருவேளை சாதகமான தீர்ப்பு வராவிட்டால் இறுதி வரை சட்ட ரீதியாகப் போராடப் போவதாக மனித உரிமை ஆணையம் கூறியுள்ளது

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »