பூஜை அறையில் காமகளியாட்டம்: 150 பெண்ணை மயக்கிய கோவை செக்ஸ் ஜோதிடர்; பரபரப்பு தகவல்கள்

கோவை செல்வபுரம் அடுத்த தெலுங்குபாளையம் சி.ஜி.வி. நகரை சேர்ந்தவர் வி.டி. ஈஸ்வரன். இவர் வசிய ஜோதிட மருத்துவ நிலையம் நடத்தி வந்தார்.

கடந்த 10 ஆண்டுகளாக குடும்ப பிரச்சினை, கணவன்- மனைவி பிரச்சினை, குழந்தையின்மை, தீராத நோய்களுக்கு தீர்வு, தீராத வலிக்கு தீர்வு போன்ற பல்வேறுவிதமான பிரச்சினைகளுக்கு ஜோதிடம் மற்றும் மருத்துவம் செய்து வந்தார்.

குறிப்பாக பெண்களுக்கு குறைந்த கட்டணம் வசூலித்ததால் இவரிடம் கூட்டம் அலைமோத தொடங்கியது. துண்டு பிரசுரங்கள் மூலமும், டி.வி. மற்றும் ஜோதிட திலகம் என்று தனக்கு தானே பட்டம் சூட்டிக்கொண்டு குடும்ப பிரச்சினை தீர ஆலோசனை வழங்கி வந்தார்.

இதனால் அவருக்கு லட்சக்கணக்கில் பணம் குவிந்தது. இந்த நிலையில் செல்வபுரத்தை சேர்ந்த சந்திரிகா (வயது 47), பாக்கியலட்சுமி (47) ஆகிய 2 பெண்கள் குடும்பத்தில் கணவன்- மனைவி பிரச்சினையை தீர்ப்பதற்கு குறி கேட்பதற்காக சென்றனர்.

ஜோதிட நிலையத்தில் வி.டி.ஈஸ்வரன் அவர்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி உள்ளார். பின்னர் இருவரிடமும் தனிமையில் தியானம் செய்து நான் சொல்லும் மந்திரத்தை சொன்னால் தீர்வு கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

அதன்படி சந்திரிகா, பாக்கியலட்சுமி ஆகிய 2 பேரையும் தனிதனியாக அமர வைத்து செக்ஸ் குறித்து பேசி பாலியல் உணர்வுகளை தூண்டி உள்ளார். தொடர்ந்து விளக்குகளை அணைத்துவிட்டு பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

2 பேரும் அதற்கு இணங்க மறுத்து தப்பி வந்துவிட்டனர். இதுகுறித்து 2 பேரும் போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவிடம் புகார் செய்தனர். அவரது உத்தரவின் பேரில் செல்வபுரம் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையிலான போலீசார் அதிரடியாக சென்று செக்ஸ் ஜோதிடர் வி.டி.ஈஸ்வரனை கைது செய்தனர்.

அவரது ஜோதிட நிலையத்தில் இருந்து, 15 ஆபாச சி.டி.களையும், உணர்ச்சிகளை தூண்டக்கூடிய பாடல் காசெட்டுகளையும் போலி எந்திர தகடுகள், வசிய மை போன்றவற்றையும், அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியதாக வைத்திருந்த போலி ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.

அவரிடம் கமிஷனர் சைலேந்திரபாபுவின் நேரடி மேற்பார்வையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் வி.டி.ஈஸ்வரன், கடந்த 10 ஆண்டுகளாக ஏராளமான பெண்களை மயக்கி காமகளியாட்டம் நடத்தி செக்ஸ் ஜோதிடராக வலம் வந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாது:-

வி.டி.ஈஸ்வரன், 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். வயிற்று பிழைப்புக்காக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவில் சித்த மருத்துவ நிலையம் தொடங்கி உள்ளார். பின்னர் தன்னை ஜோதிடர் என்ற சொல்லிக் கொண்டு குறி சொல்ல ஆரம்பித்துள்ளார்.

குருட்டு பூனை விட்டத்தில் பாய்ந்தது போல சிலருக்கு சில விஷயங்கள் நடந்துள்ளது. உடனே அதை தனது சாதனை என்று துண்டு பிரசுரங்களாக அடித்து வினியோகித்து விளம்பரப்படுத்தி உள்ளார்.

அதை பார்த்து இவரிடம் குறி கேட்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ரூ. 11 கட்டணத்தில் ஆரம்பித்து ரூ. 1000-ஆக உயர்த்தி உள்ளார். ஜோதிடம் பார்க்க வரும் பெண்களின் மனநிலையை அவர்களிடம் பேச்சு கொடுத்து அறிவார்.

அவர்கள் குடும்ப தாம்பத்யத்தில் திருப்தி இல்லாமல் இருப்பது தெரிய வந்தால் முதல் வேளையாக அவர்களுக்கு பாலுணர்வை தூண்டும் விதமாக நடந்து கொண்டு தனது பள்ளியறைக்கு கூட்டிச் சென்று “சாமி உங்களுக்கு மன்மதன் மூலம் மகிழ்ச்சி தர போகிறார்” என்று கூறி மயக்கி அவர்களுடன் உல்லாசமாக இருப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் ஏராளமான பெண்கள் இவர் வலையில் விழுந்து வாழ்க்கையை தொலைத்துள்ளனர். அவர்களிடம் ஒவ்வொரு முறையும் ரூ. 1000 முதல் ரூ. 3 ஆயிரம் வரை வாங்கி ஏமாற்றி உள்ளார். திருமணமான பெண்களிடம் மட்டுமே செக்ஸ் வைத்துக்கொள்வார். இளம் பெண்களிடம் சில்மிஷத்துடன் நிறுத்திக் கொள்வார்.

ஒரு வேளை எல்லை மீறினால் கற்பழிப்பு வழக்கில் உள்ளே போய்விடுவோம் என்று உஷாராக இருந்துள்ளார். தன்னிடம் வந்து சென்ற பெண்கள் பற்றிய விஷயங்களையும் அவர்களிடம் வசூலித்த தொகைகளையும் டைரியில் முகவரியுடன் குறிப்பிட்டு வைத்துள்ளார். யார் -யாருடன் உடலுறவு வைத்தாரோ அவர்களது பெயரில் சிகப்பு நட்சத்திர குறியீட்டை அடையாளமாக குறித்துள்ளார்.

தினமும் வி.டி.ஈஸ்வரனை பார்க்க குறைந்த பட்சம் 6 பேர் முதல் 12 பேர் வரை வந்து சென்றுள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் அதிகபட்சமாக 1500-க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். இவர்களில் 1200-க்கு மேற்பட்டவர்கள் பெண்கள். இவர்களில் 200-க்கும் மேற்பட்ட பெண்களின் பெயர்களில் சிகப்பு நட்சத்திர குறியீடு போட்டு வைத்துள்ளார்.

பெண்களிடம் முதலில் தன்னை ஒரு சித்தர் என்று கூறுவார். தான் ஆண்மை சக்தி மிக்கவன். நாளை என்ன நடக்கும் என்பதை அறியும் 7-வது அறிவு என்னிடம் உள்ளது என்று கூறியபடியே பெண்களின் அங்கங்களை அவர் வர்ணித்து செக்ஸ் ஆசையை தூண்டுவார்.

யாரையும் வற்புறுத்தி செக்ஸ் கொள்ள விரும்புவதில்லை. அவர்களது மனதை கெடுத்து அவர்களுக்கு தன்னிடம் உள்ள காதல் வலி (லவ் பெயின்) என்ற ஆபாச சி.டி.யை போட்டு காட்டுவார். அவர்களுடன் அமர்ந்து அதை பார்த்து அவர்களின் உணர்ச்சியை மேலும் தூண்டி தனது இச்சையை தீர்த்து கொள்வார்.

எந்த பெண்களாவது இங்கு நடப்பதை வெளியில் சொன்னால் பில்லி, சூனியம் வைத்து விடுவேன் பிறகு கைகள் செயல் இழந்து ரத்தம் கக்கி செத்து விடுவீர்கள் என்று மிரட்டி உள்ளார். இதனால் யாரும் போலீசில் புகார் செய்யாமல் இருந்துள்ளனர்.

நாளொன்றுக்கு ரூ. 12 ஆயிரம் வரை சம்பாதிப்பதாகவும் அமெரிக்கா பல்கலைக்கழகம் தனக்கு டாக்டர் பட்டம் வழங்கி உள்ளதாகவும் கூறி கோர்ட் ஷூட் போட்டுக் கொண்டும் ஒரு சில வசதி படைத்த பெண்களிடமும் கைவரிசை காட்டி உள்ளார்.

செய்வினை எடுப்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். டி.வி.க்களில் வசிய ஆலோசனை வழங்குவதாக கூறியே பல பெண்களை வெளியூர்களில் இருந்து தன்னை தேடி வரவழைத்துள்ளார். அதன்படி காதலனை வசியபடுத்த மை தருவதாக கூறி ஏராளமான பெண்களிடம் எல்லை மீறியுள்ளார்.

ஒரு சில பெண்களுக்கு அல்வாவில் கஞ்சா வைத்து கொடுத்து “செக்ஸ்” அடிமையாக வைத்துள்ளார். பொள்ளாச்சி ராணி, சேலம் குருவம்மாள், திருப்பூர் சவிதா உள்ளிட்ட 12 பெண்களை நிரந்தரமாக வைத்து செக்ஸ் அனுபவித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்தால் அவர்களது பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும்.வி.டி.ஈஸ்வரன் தன்னுடன் தொடர்பு வைத்துள்ள பெண்களை ஆபாச படம் எடுத்தாரா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 1 Comment »

வெளிவராத உண்மை – கிருத்திகா கர்ப்பம்!!

Photobucketஉதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா உதயநிதி கர்ப்பமாகவுள்ளார் என்ற விடயத்தை இதுவரை எந்த இணையமோ பத்திரிகையோ கண்டறியாத நிலையில்.இந்த தகவலை கண்டறிந்து முதன் முதலில் வாசகர்களுக்கு தருவதன் மூலம் தனது சாதனை பயணத்தை தொடர்கிறது Onelanka.tk .

அண்மையில் நடந்த நிகழ்வு ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் மூலம் அவர் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.கர்ப்பகாலத்தில் குழந்தைக்கு  பாதிப்பு ஏற்ப்படாமல் கீல்ஸ் உள்ள பாதணி அணியாமல் சாதாரண பாதணி ஒன்றுடன் அவர் நிகழ்வுக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

kiruthika

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 6 Comments »

தோல்வியை ஜீரணிக்க முடியாத கமல்….

சிலருக்கு வாயே நோய்! அந்த சிலரில் முதலிடத்தில் இருப்பார் போலிருக்கிறது Madhavan - Kamalahasanமாதவன். கடந்த சில வருடங்களுக்கு முன் திரைப்பட தயாரிப்பாளர்கள் பற்றி இவர் கொடுத்த பேட்டி ஒன்று பெரும் விவகாரத்தில் கொண்டுபோய் விட்டது மேடியை. தயாரிப்பாளர் சங்கத்திற்கு நேரில் வந்து மன்னிப்பு கேட்கணும். இல்லையென்றால் எல்லா மொழிகளிலும் தடை என்ற வஜ்ராயுதத்தை எடுத்து வீசியது சங்கம்.

அப்புறமென்ன? அடக்கமே அமரருள் ஊய்க்க அமைதியாக வந்திறங்கினார் மேடி. வார்த்தைக்கே வலிக்காமல் ஒரு மன்னிப்பை கேட்டுவிட்டு ஓடிப் போனார். அதெல்லாம் மறந்திருக்கும் போல… சமீபத்தில் ஒரு முன்னணி இதழில் எந்திரனை விட மன்மதன் அம்பு சுமாரான படம்தான் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

இந்த உண்மையை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். திருப்பதியில் நின்று கொண்டு மொட்டையை விமர்சிக்கலாமா? இதே படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் இவரே சொன்னதுதான் வினை. மேடிக்கு விழுந்தது மொத்து! படம் தொடர்பான அத்தனை பேரும் ஒரு முறை போனில் வந்து இஞ்சி மரபா கொடுத்தார்கள். கடைசியாக வந்தது கமல்ஹாசன்தானாம்.

இனிமே இப்படியெல்லாம் வாயை விட மாட்டேன் என்று மாதவன் மனம் வருந்திய பிறகுதான் கூலானாராம் உலக நாயகன்!

இப்படி தனது மொக்கை படத்தின் தோல்வியையே ஒத்துக்கொள்ளாத கமல் போன்றவர்கள் மேடைகளிலும் தொலைக்காட்சிகளிலும் மேதாவி பேச்சுக்கள் பேசுகிறார்களோ தெரியவில்லை.

Daily News இல் பதிவிடப்பட்டது . 6 Comments »

Box office இல் பின்தங்கிய காவலன்….

சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சென்ற வார இறுதியில் ஆடுகளத்தை இரண்டாமிடத்துக்கு தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது, கார்த்தியின் சிறுத்தை. வெளியானது முதல் மூன்றாவது இடத்திலேயே உள்ளது விஜய்யின் காவலன்.

காவலன் சென்ற வார இறுதியில் 47.9 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரையான அதன் மொத்த சென்னை வசூல், 1.51 கோடி.

இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கும் ஆடுகளம் சென்ற வார இறுதியில் 49.07 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரையான ஆடுகளத்தின் சென்னை வசூல், 1.70 கோடி.

சிறுத்தை சென்ற வார பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல், 62.51 லட்சங்கள். காவலன், ஆடுகளம் இரண்டையும்விட மிக மிக அதிகம். இதுவரையான சிறுத்தையின் சென்னை வசூல், 1.98 கோடி.

சென்ற வார இறுதி வசூலில் மட்டுமில்லாது மொத்த வசூலிலும் விஜய்யின் படம் பின்தங்கியே உள்ளது. பாக்ஸ் ஆஃபிஸின் நான்காவது இடத்தை இளைஞனும், ஐந்தாவது இடத்தை மன்மதன் அம்பும் பிடித்துள்ளன.

Source :  webdunia.com

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »

விஜயின் காவலன் பற்றி மனம் திறந்த கமல்…(video)

விஜய் பற்றி கமல் ரொம்ப அருமையாக சொல்லி இருக்கார் …!!

 

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »