நயன்தாரா விவகாரம் ரமலத்தின் அமைதி! -போட்டுத் தாக்கும் பின்னணி!!

Photobucketஒரு நிம்மதி இன்னொரு நிம்மதியை கெடுக்க முடியுமா? ரமலத்-பிரபுதேவா-நயன்தாராவின் முக்கோண காதலை அறிந்தவர்களின் பதில், ‘முடியும்’ என்பதாகதான் இருக்கும். ரமலத்தின் நிம்மதியில் அத்துமீறி நுழைந்து அம்மிக்கல்லை போட்டிருக்கிறது நயன்தாராவின் நிம்மதி.

செல்போன் டவரில் ஏறி நின்று கூப்பாடு போட்டிருந்தால் கூட இத்தனை ரீச் ஆகியிருக்குமா தெரியாது. முணுக்கென்று மும்பையில் மூச்சு விட்டார் பிரபுதேவா. அவ்வளவுதான், தமிழ் கூறும் நல்லுலகத்தின் நாடி நரம்பெல்லாம் இந்த கல்யாண பேச்சுதான் ஊடுருவிக் ஓடிக்கொண்டிருக்கிறது இப்போது. இந்த பேட்டிக்கு பிறகு ஏற்படப் போகும் பிரளயங்களை தவிர்க்கும் விதத்தில் தங்கள் செல்போன்களையே ஆஃப் பண்ணிவிட்டு அமைதி காக்கிறார்கள் இந்த காதலில் விழுந்த நெஞ்சங்கள். குமுறித் தீர்க்க வேண்டிய ரமலத் உட்பட!

‘உருமி’ என்ற மலையாள படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் பிரபுதேவா. இப்படத்தை இயக்கிக் கொண்டிருப்பது பிரபல இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான சந்தோஷ்சிவன். மும்பையில் நடந்து வருகிறது படப்பிடிப்பு. இங்கு வைத்துதான் தனது எண்ண ஓட்டத்தை முதல் முறையாக வெளிப்படுத்தியிருக்கிறார் பிரபுதேவா.

இத்தனை காலமாக நயன்தாராவுடனான காதல் பற்றி மூச்சு கூட விடாத பிரபுதேவா, Nayanthara - Prabhu Devaமுதன் முறையாக அது பற்றி பேசியதே ஒரு ஆச்சர்யம். அதிலும் நான் நயன்தாராவை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று பகிரங்கமாக அறிவித்திருப்பது இன்னொரு ஆச்சர்யம்.

இந்த பதிலின் பின்னணியில் நடந்தது என்ன? இத்தனை காலம் அமைதியாக இருந்த பிரபுதேவா திடுதிப்பென்று பேச வேண்டிய அவசியம் என்ன? இந்த கேள்விகளோடு கோடம்பாக்கத்தில் சில முக்கியஸ்தர்களை சந்தித்தோம். அவர்கள் சொல்வதை கேட்பதே ஒரு சுவாரஸ்யமான திரைக்கதை போலிருந்தது.

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை முடித்துவிட்டு உருமி படப்பிடிப்பில் இருக்கிற பிரபுதேவாவுடன் சென்று தங்கிவிட வேண்டும் என்பதுதான் நயன்தாராவின் முடிவு. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கே அவர் வரவில்லை. படம் தொடர்பான பிரமோஷன்களுக்கு வருவாரா, மாட்டாரா என்றும் குழம்பிக் கொண்டிருந்தார்கள் அப்படக் குழுவினர். படம் ரிலீஸ் ஆனபின் ஒரு மாதம் நான் சென்னைக்கே வரமாட்டேன் என்றும் கூறியிருந்தாராம் நயன்தாரா. ஆனால் நடந்ததே வேறு. இப்படம் தொடர்பாக சின்னத்திரையில் நடந்த அத்தனை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார் அவர். முன்பு முடிவு செய்திருந்த மாதிரி உருமி படப்பிடிப்புக்கு செல்லவும் இல்லை என்று பிரபுதேவாவின் அந்த பரபர பேட்டிக்கான பிள்ளையார் சுழி பற்றி விவரித்தார்கள் அவர்கள்.

அப்புறம்?
தனது வழக்கமான செல்போன் எண்ணை மாற்றிவிட்டு தற்காலிகமாக ஒரு எண்ணோடு சென்னையில் உலா வந்தார் அவர். சொன்னபடி தன்னை சந்திக்க வரவில்லையே என்று கவலைப்பட்ட பிரபுதேவா, நயன்தாராவின் செல்போனுக்கு தொடர்ந்து முயற்சித்தாலும் பலன் பூஜ்யம்தான். இந்த காதலுக்கு ஆரம்பத்திலிருந்தே து£தர் யாரும் இல்லை. இருந்த ஒரு து£தரும் புது மாப்பிள்ளை ஜோரில் இருப்பதால் (யாருன்னு புரியுதா?) நயன்தாராவை தொடர்பு கொள்ள முடியாமல் தவியாக தவித்தார் மாஸ்டர்.

ஏன் செல்போனை அணைத்துவிட்டு ஒதுங்கினார் நயன்தாரா?

அங்குதான் சாம, பேத, தான, தண்டம் என்ற டெக்னிக்கை பயன்படுத்தியிருக்கிறார் Nayanthara - Prabhu Devaஅவர். தண்டனிடுவார் பிரபுதேவா என்று தெரிந்தேதான் இந்த முடிவுக்கு வந்தாராம் நயன். வெகு காலமாகவே தன்னை திருமணம் செய்து கொள்ள சொல்லி வற்புறுத்தி வந்தார் நயன்தாரா. அதற்கு உடனடியாக பதில் சொல்லாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார் பிரபுதேவா. அடிப்படையில் மென்மையான இதயமும், மனிதாபிமானமும் நிரம்பிய நயன்தாராவால் இந்த ஒத்திப் போடுகிற விஷயத்தை அவ்வளவு சுலபமாக ஜீரணிக்க முடியவில்லை. ஒருவேளை நமது ஸ்தானம் ஆசை நாயகி என்ற அந்தஸ்தோடு முடிந்துவிடுமோ என்று கூட அஞ்சினாராம் ஒரு சந்தர்ப்பத்தில்.

கல்யாணத்தை தள்ளிப் போடலாம். கல்யாண அறிவிப்பையாவது முதலில் வெளியிடலாமே என்ற நயன்தாராவின் ஆசைக்கு வழக்கம்போல ஜவ்வு மிட்டாய்தான் பதிலாக இருந்ததாம் மாஸ்டரிடமிருந்து. இதையெல்லாம் மனதில் வைத்துதான் உருமி படப்பிடிப்புக்கு போகாமல் தவிர்த்தார் என்கிறது நமக்கு கிடைத்த தகவல்கள்.

பிரிவின் ஆற்றாமை பிரபுதேவாவை ஒரு முடிவுக்கு வரச் செய்தது. தினமும் ஒரு முறையாவது நயன்தாரா படிக்கிற ஆங்கில வெப்சைட் எது என்பதை நன்றாக அறிந்து வைத்திருந்த பிரபுதேவா, இந்த வெப்சைட்டின் பெண் நிருபரை தொடர்பு கொண்டு இந்த பேட்டியை வெளியிட செய்தாராம். வெளிப்படையான இந்த அங்கீகாரத்தைதான் எதிர்பார்த்திருந்தார் நயன்தாரா.

மேற்படி பேட்டி வெளியான நிமிடத்தில் இருந்தே பிரபுதேவாவின் மனைவியான ரமலத்தை தொடர்பு கொள்ள துடியாக துடித்தது மீடியா. ஆனால் தனது செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்ட அவர், விடாமல் முயற்சித்து தொடர்பு கொண்ட ஒரு சிலரிடமும் இது குறித்து பேச விரும்பவில்லை என்று கூறிவிட்டார். அவரது அமைதிக்கான காரணம் குறித்தும் விசாரித்தோம்.

வில்லு படப்பிடிப்பின் போது கூட இயக்குனர்-கதாநாயகி என்ற அளவிலேயே பழகி வந்தார்கள் பிரபுதேவாவும் நயன்தாராவும். அந்த நேரத்தில்தான் தனது மகனை பறி கொடுத்தார் மாஸ்டர். இந்த துக்கத்தின்போது அருகிலேயே இருந்து ஆறுதல் சொன்னது நயன்தாராதான். அப்போதுதான் இருவருக்கும் இடையே காதல் பற்றிக் கொண்டது. அதற்காக தனது குடும்பத்தையோ, மனைவியையோ விட்டு விட்டு செல்கிற அளவுக்கு கல் நெஞ்சக் காரராக தன்னை மாற்றிக் கொள்ளவில்லை பிரபுதேவா. இருவரையும் ஒரே நேரத்தில் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாக இருந்தது.

இதற்கு நயன்தாரா ஒப்புக் கொண்டாலும், ரமலத் ஒப்புக் கொள்ளவில்லை. அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில்தான் தொடர்ந்து ஈடுபட்டு வந்தாராம் பிரபுதேவா. சொத்து விஷயங்களும் சட்ட ரீதியாக சில விஷயங்களும் பேசப்பட்டன. அதுவும் சமீபத்தில் கை கூடி விட்டது என்பதால்தான் இப்படி ஒரு துணிச்சலான பேட்டி அவரிடமிருந்து வந்ததாக தெரிவிக்கிறார்கள் பிரபுதேவாவுக்கு மிக சமீபமாக இருப்பவர்கள்.

வந்தால் உதைப்பேன் என்று பகிரங்கமாக பேட்டியளித்த ரமலத், சமீபத்தில் நயன்தாராவுடன் செல்போனில் பேசியதாகவும் கூட கூறுகிறார்கள் அவர்கள். ‘அக்கா அக்கா’ என்று ரமலத்திடம் தன் பிரியத்தை வெளிப்படுத்தும் நயன்தாரா சமீபத்தில் விலை உயர்ந்த பரிசுப் பொருள் ஒன்றை வாங்கி ‘அக்காவிடம் கொடுங்க’ என்று பிரபுதேவாவிடமே கொடுத்தனுப்பியதாகவும் கிசுகிசுக்கிறார்கள்.

சட்ட நிபுணர்கள் அலசுவது மாதிரி, கணவர் மீது ரமலத்தே புகார் கொடுத்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும். அப்படியில்லை என்றால் பிரபுதேவாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் யாரும் மூக்கை நுழைக்க முடியாது. பிரபுதேவா வைக்கும் ஸ்டெப் ஒவ்வொன்றும் இதன் அடிப்படையிலேயே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 3 Comments »

பாஸ் என்கிற பாஸ்கரன்-விமர்சனம்

Photobucket

நண்பேன்டா….

இந்த ஒற்றைச்சொல்லில் உயிர் கொண்டிருக்கிறது படம். கிழிய கிழிய அடி. பிழிய பிழிய அழு என்கிற சினிமா சென்ட்டிமென்ட்டை வீசி கடாசிவிட்டு ‘வாங்க மக்களே’ என்று தோளில் கை போட்டுக் கொள்கிறார் டைரக்டர் ராஜேஷ். அந்த இரண்டே முக்கால் மணி நேரமும் தியேட்டரே அதிரடி சிரிப்பால் பேயாட்டம் போடுகிறது.

வெட்டியாக சுற்றுவதையே வேலையாக பார்க்கும் ஆர்யாவுக்கு காதல் மட்டும் கரெக்டாக வந்து விடுகிறது. பல வருடங்களாக பரிட்சை எழுதிக் கொண்டிருக்கும் ஆர்யாவுக்கும், லெக்சரர் நயன்தாராவுக்கும் ‘பிட்’ அடிக்கிற விஷயத்தில் பிரச்சனை வந்து அதுவே காதலாகி விடுகிறது. குடிகாரன் பாக்கெட்டில் குவார்ட்டர் விழுந்த மாதிரி, அவரே புது அண்ணியின் தங்கச்சியாக வந்து அமைய ஆர்யா காட்டில் அடை மழை. உருப்படியா வேலை பார்க்காதவனுக்கு என் பொண்ணை தர முடியாது என்று நயன்தாராவின் அப்பா மறுக்க, அதற்கு ஆர்யாவின் குடும்பமும் சப்போர்ட். ஐயோ பாவம். வீட்டை விட்டே வெளியேறுகிறார் ஆர்யா.

பெட்டி படுக்கையுடன் அவர் போய் சேர்கிற இடம், அதே ஊரில் அமைந்துள்ள சந்தானத்தின் சிகையலங்காரக் கடை. கத்தி நடமாடுகிற இடத்தில் கூடவே ஒரு சுத்தியும் சேர்ந்து கொண்டால் என்னாகும்? ரகளையாகிறது ஏரியா. இரண்டு பேரும் சேர்ந்து ஒரு பிசினஸ் செய்யலாம் என்று பிளான் போட்டு டுட்டோரியல் சென்ட்டர் ஆரம்பிப்பதும், அதற்கு அந்த ஊர் தாதா ராஜேந்திரன் பண உதவி செய்வதும், பரிகாரமாக பத்தாங் கிளாஸ் பாஸ் பண்ணவே முடியாத அவரது மகனை இவர்கள் பாஸ் பண்ண வைக்க போராடுவதுமாக திணற திணற சிரிக்க வைக்கிறார்கள். கடைசி பத்து நிமிஷம் ஜீவாவும் கெஸ்ட் ரோல் அடையாளத்தோடு உள்ளே குதிக்கிறாரா… பிரளயமே நடக்கிறது தியேட்டரில்.

சந்தானம் பேசுகிற ஒவ்வொரு டயலாக்குக்கும் குறைந்தபட்ச அஹ்ஹஹ்ஹா நிச்சயம். ‘வருஷம் முழுக்க பேசணும். அதுவும் ஃப்ரீயா பேசணும்’ என்று செல்போன் கடையில் ஆர்யா விரும்ப, ‘அதுக்கு நீ நேராதான் போய் பேசணும்’ என்கிற சந்தானத்தின் பதில் சர்வ நாஸ்தி. குடித்துவிட்டு சித்ரா லட்சுமணனின் பாராட்டு விழாவில் புகுந்து கலாய்க்கிற காட்சி பயங்கரம்ப்பா. ‘ஒரே ஒரு சுத்துற நாற்காலிய வச்சுருக்கிற உனக்கே இப்படின்னா, நாலு சுத்துற நாற்காலியை போட்டு கத்தியை வைக்கிற எனக்கு எவ்வளவு இருக்கும்’ என்று அவர் குடிபோதையில் குமுறுவது அல்டிமேட் டச்! ‘அலைபாயுதே மாதவன்னு நினைச்சா அரண்மனைக்கிளி ராஜ்கிரணா இருக்கியே…. கமல்ஹாசன் மாதிரி புரியாமலே பேசுறியே…’ என்று சினிமா ஏரியாக்களிலும் ‘கத்தி’ வைத்திருக்கிறார் சந்தானம். (பார்த்துங்ணா…)

மூக்கு நுனியில் கோபமும், நாக்குக்கு அடியில் நக்கலுமாக ஆர்யாவுக்கு இது புது கேம். மனுஷன் பின்னி எடுத்திருக்கிறார். கப் அண்டு சாசர் மாதிரி ஆர்யா-சந்தானம் காம்பினேஷன் செம ஜோர். டுடோரியல் சென்ட்டரில் டீச்சர் பணிக்கு ஷகிலாவை அழைத்து வரும் சந்தானத்திடம், சூழ்நிலை தெரியாமல் ‘இவங்கள ஏண்டா இங்க அழைச்சிட்டு வந்தே?’ என்று ஆர்யா ஹஸ்கி வாய்சில் கேட்கிற போது புரிஞ்சு சிரிக்குதுய்யா பொதுஜனம். எந்த வேலையை சொன்னாலும் அதில் ஒரு ரிஸ்க் வைக்கும் ஆர்யா கடைசியில் நயன்தாராவை கை பிடிக்கிற வரை வைக்கிற ஸ்டெப் எல்லாமே ஆனந்த கூத்து.

Photobucketநயன்தாராவை பார்க்கிற போதெல்லாம் எப்பிடி இருந்த பொண்ணு இப்பிடியாருச்சே என்று கவலை கவலையா வருது. ‘போதும் நீங்க டுட்டோரியல் நடத்துற லட்சணம். நீ சொன்ன மாதிரியே நான் வாங்குற பதினைஞ்சாயிரம் சம்பளத்துல உன்னையும் வச்சு காப்பாத்துறேன்’ என்று ஆர்யாவின் கண்ணோடு கண் நோக்கி நயன் அடிக்கிற டயலாக்குக்கு சொர்க்கத்தையே எழுதி வைக்கலாம்.

அண்ணனாக நடித்திருக்கும் சுப்புவுக்கு அசத்தல் வேலை. மாட்டு டாக்டர்! கல்யாண வயசை மிஸ் பண்ணிவிட்டு விஜயலட்சுமியிடம் வழியும் காட்சிகள் பேரிளமை ஆல்பம்! முதலிரவு தள்ளிப் போக, ஒரு பார்வையிலேயே எரிச்சலை காட்டுவதும் அற்புதம்.

கொடூர வில்லனாகவே அறியப்பட்ட நான் கடவுள் ராஜேந்திரன், இதிலும் அப்படி ஆகிவிடுவாரோ என்று பதற வைத்து சுபம் போடுகிறார் டைரக்டர். (அப்பாடி…!) பாஸ் பண்ணவே மாட்டான் என்று நினைத்திருந்த மகன் பாஸ் ஆகிவிட்டான் என்று தெரிந்ததும், பின்னால் நிற்கும் ஒரு மாணவர் கூட்டத்தையே பார்த்து ‘நீங்களும் பாஸ்தாண்டா ஓடுங்க’ என்கிறாரே, சூப்பர்.

இந்த படத்திலேயே ஒரு அற்புதமான சென்ட்டிமென்ட் கலவை அந்த கூலிங்கிளாஸ் டீச்சர்தான். பார்வையில்லாத அவர், யாருமே இல்லாத வகுப்பறையில் கிளாஸ் எடுக்க அதிர்கிற மக்கு மாணவன் மனம் திருந்துவதும், மற்ற மாணவர்களை மிரட்டி அழைத்து வருவதும் ரியலி குட்!

யுவனின் இசையும் ஷக்தி சரவணனின் ஒளிப்பதிவும் வழக்கம் போலவே கிரேட்.
டுட்டோரியலை வைத்து ஒரு ‘ஹிட்’டோரியல்!

Onelanka Review Team

Rating – 4.5/5

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »

ஆனந்தபுரத்து வீடு் -விமர்சனம்

Photobucket“‘நாயா இருந்தா குலைக்கணும். பேயா இருந்தா முறைக்கணும்’ எழுதப்படாத இந்த சினிமா இலக்கணத்தை ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு ‘பிள்ளை என்றால் பேயும் இறங்கும். மருமகள் என்றால் மறுகணமே சரண்டர்’ என்கிற சாத்வீக பேயை காட்டுகிறார் டைரக்டர் நாகா. உங்களுக்கு நிஜமாகவே ஒரு ஆஹா!

மனைவி, குழந்தையுடன் பதினைந்து வருடங்கள் கழித்து தனது சொந்த கிராமமான ஆனந்தபுரத்துக்கு வருகிறார் நந்தா. பல வருடங்களாக பூட்டிக் கிடக்கிற வீட்டில் அவரது தாய், தந்தையின் ஆவி உலவுகிறது. இதை முதலில் உணர்ந்து கொள்கிற சாயாசிங் அங்கிருந்து கிளம்பலாம் என்று நந்தாவை வற்புறுத்த, கிளம்பவே முடியாதபடி ஒரு லாக்! பிசினஸில் ஏற்பட்ட கடனுக்காக அந்த கிராமத்து வீட்டில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார் நந்தா. இவர் தப்பிக்க முயலும் ஒவ்வொரு நேரமும், வேணும்னா நீங்க போங்க. உங்க ஃபேமிலியை நான் பார்த்துக்கிறேன் என்று சிரித்துக் கொண்டே கழுத்தறுக்கிறார் அந்த பருமனான பைனான்சியர். இவர் பெயர் மேகவர்ணபந்த். பெயரை போலவே அவரது வித்தியாசமான நடிப்புக்கும் சேர்த்து ஒரு ஷொட்டு.

கூடவே இருக்கிற நண்பனே துரோகியாகிற போது வீட்டிலிருக்கிற ஆவிகள் எடுக்கிற முடிவும், நந்தா அண் பேமிலியின் நிம்மதி பெருமூச்சும்தான் படம்.

இது பேய்வீடு என்பதை முதல் ஷாட்டிலேயே ஓப்பன் பண்ணிவிடுகிறார் டைரக்டர். பல காலமாக சுத்தம் செய்யப்படாத வீடு, பிள்ளை வருகிறான் என்றதும் தானாக கூட்டி பெருக்கி சுத்தமாகிக் கொள்வதும், வீட்டுக்குள் நுழைந்த பேமிலிக்கு சுட சுட தானாகவே உணவு சமைத்துக் தருவதுமாக ஒரு ஆவியுலக அற்புதத்தை ஆரவாரமாக ஆரம்பித்து வைக்கிறார் நாகா. ஆனால் ஆவிகளின் அற்புதங்கள் ஜன்னலை திறந்து திறந்து மூடுவதிலேயே பாதி (பிராணன்) போய்விடுகிறது. ஆனாலும், அந்த துரோகிக்கு தருகிற சாட்டையடியும், அந்தரத்தில் ஊஞ்சலை து£க்கி அலற விடுவதும் தனி சுவாரஸ்யம். மனைவியை கை நீட்டுகிற பிள்ளை நந்தாவை தனது கைத்தடியால் போட்டுத்தள்ளுகிற அந்த காட்சியும் கைதட்டல் களேபரம்.

நந்தாவுக்கு இயல்பாகவே சற்று மிரண்ட முகம். பொருத்தமாக இருக்கிறார் பல காட்சிகளில். தனது அப்பா அம்மாதானே என்று கூட நினைக்காமல் வீட்டை விட்டு ஓட முயல்வது பரிதாபம். அதைவிட பரிதாபம், என்னை ஏன் போக விட மாட்டேங்கிறீங்க என்று ஆவிகளிடம் ஆவேசப்படுகிற காட்சி.

முதலில் அஞ்சினாலும், இந்த ஆவிகளால் தனக்கும் தன் பிள்ளைக்கும் ஆபத்தில்லை என்பதை உணர்கிற நிமிடத்திலிருந்தே சாயாசிங் ஹாயா சிங் ஆகிவிடுகிறார்.

லேண்ட் புரோக்கர் ரத்தினமாக கணேஷ்பாபு. ஆவிகள் இருப்பதை அறியாமலே இவரும் இவர் கூட்டி வரும் அண்ணாச்சியும் வீடு பார்க்காமல் பாதியில் பிடிக்கிற ஓட்டம் இருக்கிறதே, வீடு வந்து சேர்கிற வரை நமக்கு தொடர்கிறது சிரிப்பு. நண்பன் நந்தாவை தன் கண்ணெதிரிலேயே சிலர் மிரட்டுவது பொறுக்காமல் ‘வெளியூர்காரன் அடிக்க வர்றதா’ என்று பாய்வதும் சரியான டச்சிங்.

அந்த குழந்தை ஆர்யனின் முகபாவங்கள் தனி போட்டோ கேலரியாகவே மனதில் பதிகிறது. அந்த மலர்ந்த முகத்தில் ஆயிரமாயிரம் அசகாய எக்ஸ்பிரஷன்கள். இந்த பேரனுக்காக தாத்தா பாட்டி ஆவிகளின் பாசப்பிணைப்பும் மிக சரியாக சொல்லப்பட்டிருக்கிறது. இன்னும் ஒரு முக்கிய கேரக்டர் கலைராணி. முதல் காட்சியிலேயே ஆவிகளின் மகிமையை புரிந்து கொள்கிற இவர் அப்புறம் ஏன் பயந்து ஓட வேண்டும்?

ரமேஷ்கிருஷ்ணாவின் இசை பேய் படம் என்ற மிரட்டலை தராமல் தாலாட்டியிருக்கிறது. கதையோடு கை பிடித்து அழைத்துச் செல்கிறது அருண்மணி பழனியின் ஒளிப்பதிவு.

Rating – 2.5/5

– onelanka விமர்சனக்குழு –

Photobucket

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »