பிரபல நடிகை அனார்கலியை சில்மிஷம் செய்தார் என்று பலரால் பேசப்பட்டுவந்தவரும், ஆளும் கட்சியின் முக்கிய உறுப்பினரும், முக்கியஸ்தருமான துமிந்த சில்வாவின் 2 காதலிகளுடன் நமால் ராஜபக்ஷ நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்தியதால் இவர்கள் இருவருக்கும் இடையே ஒரு பனிப்போர் மூண்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக இரண்டு தரப்பினருக்கும் இடையில் சமரசம் செய்வதற்காக இவர்களுக்கு நெருக்கமான சிலர் வெள்ளவத்தையில் உள்ள கிறீன் லீப் விடுதியில் சந்தித்துள்ளனர். இருப்பினும் இச் சமரச பேச்சுவார்தைகள் கடைசியில் பெரும் வாய் தர்க்கத்தில் முடிவடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இது இவ்வாறிருக்க தேர்தல் நெருங்கிவரும் வேளையில் நமால் ராஜபக்ஷவுடன் தாம் மோதலில் ஈடுபட விரும்பவில்லை என துமிந்த தெரிவித்துள்ளாராம். இரண்டு காதலிகளை இழந்தாலும் பரவாயில்லை ஆனால் தேர்தலில் வெற்றிபெறவேண்டும் என்ற நிலையில் துமிந்த இருப்பதாக அறியப்படுகிறது. நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்கும்போது இந்தப் பிரச்சனையை ஒரு பெரிய விடையமாக்கி அதை கிறீன் லீப் விடுதியில் பேசித் தீர்ப்பதாக நண்பர்கள் கூறி , துமிந்த மற்றும் நமாலிடம் எவ்வளவு பணம் வாங்கினார்களோ தெரியவில்லை. பிரச்சனை சுமூகமாகத் தீர்ந்ததோ இல்லையே ஆனால் அங்கிருந்த உணவு மட்டும் தீர்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.