ஒரு டிக்கெட் பத்து வெள்ளி..நான் என் பிரெண்ட்ஸ் பத்து பேர என் செலவுல என் இளைய தளபதியோட அம்பதாவது படம்னு குஷில டிக்கெட் எடுத்து கூட்டிட்டு போனேன்…மொத்தம் நூறு வெள்ளி..ஊரு காசுக்கு கிட்டத்தட்ட மூவாயரத்து ஐநூறு ரூவாய்…நான் கஷ்டப்பட்டு சம்பாரிச்ச காசு…ஊர்ல ரெண்டு குடும்பம் வயறு நெறைய ஒரு மாசம் புல்லா சாப்டலாம்…அட நான் என் காசு போனத கூட பெருசா நெனைக்கல…ஆனா விஜய் மேல இவ்ளோ நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் வெச்சு படத்துக்கு ஆர்வமா வந்த ஒரு நேர்மையான ரசிகனா விஜய்கிட்டயும் இந்த படத்தோட டைரேக்டர்கிட்டையும் சில கேள்விகள் கேக்கணும்… !
விஜய் சார்..இந்த படத்துக்கு கதை கேக்கும்போது மூளைய மண்டைல வெச்சிருன்தீங்கலா இல்ல சுருட்டி சூ…துல வெச்சிருந்தீங்களா..உங்கள நம்பி நான் குடுத்த காசுக்கு நீங்க எனக்கு திரும்பி குடுத்து என்ன தெரியுமா..ஒத்த தலைவலியும், டேய் இவன் விஜய் ரசிகன்டானு சுத்தி இருகவங்ககிட்ட அவமானமும்தான்…இப்ப சொல்றேன்..வெளியூர்க்காரன் இன்னியோட விஜய் ரசிகர் மன்றதுலேர்ந்து ராஜினாமா பண்றேன்…உங்க சங்காத்தமே வேணாம் எனக்கு…எக்கேடோ கெட்டு போங்க..நீங்கல்லாம் திருந்த வாய்ப்பே இல்ல…!
டைரெக்டர் திரு ராஜ்குமார் சார்…நீங்க மனுசனா சார்…இளைய தளபதியோட அம்பதாவது படம்..என்னை மாதிரி விஜய் ரசிகன்லாம் இந்த படத்த எவ்ளோ எதிர்பார்த்து வெயிட் பண்ணிருபாங்கன்னு உங்களுக்கு தெரியுமா… என்ன சார் படத்த எடுக்க சொன்ன மயிர புடுங்கி வெச்சிருக்கீங்க…உனக்கு சினிமா எடுக்க வருதுன்னு எந்த நாய் சொன்னான் உங்ககிட்ட…ஏன் இப்டி படம் எடுத்து படம் பார்க்க வர்றவன் தாலிய அறுக்கறீங்க…தயவு செஞ்சு போயிருங்க…உங்களோட இன்னொரு படத்த தமிழ் சினிமா ரசிகர்கள் தாங்க மாட்டாங்க…மறுபடியும் சொல்றேன்…நீங்க சூடு சொரணை உள்ள மனுசனா இருந்தா சினிமா இண்டஸ்ட்ரிய விட்ருங்க…!
மக்களே இவ்ளோ நாள் விஜயோட எல்லா படங்களுக்கும் சப்ப கட்டு கட்னதுகாகவும் விஜய்காக வக்காலத்து வாங்கி உங்ககிட்டயெல்லாம் மல்லுக்கு நின்னதுகாகவும் வெளியூர்க்காரன் உங்க எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேட்டுகறான்…என்ன மன்னிச்சிருங்க…!
என்னது படம் எப்டி இருக்கா..சுறா கதையை தியாகராஜா பாகவதர்கிட்ட போய் சொல்லிருந்தா அவரு வேணாம்ப்ப இது ரொம்ப பழைய கதைன்னு சொல்லிருபாறு..ஆனா,விஜய்னா பெரிய மயிருல்ல..அதான் எடுத்து நடிசிருகாப்ள…போங்க..போய் பார்த்து நாசமா போங்க…!
நொந்து போன மனதுடன்…!
நன்றி வெளியூர்க்காரன்
this review taken from வெளியூர்க்காரன்